நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 3 டிசம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐற்கு மாற்ற வேண்டும் : எஸ்.டி.பி.ஐ கோரிக்கை



பரமக்குடியில் தலித்துகள் மீதான் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை தலா ஒரு இலட்சம் என தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்!



தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள்.

சமூக நீதி மாநாடு தரும் செய்தி!

சமூக நீதியையும்,சம உரிமைகளையும் தேடி இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தின் மகத்தான வளர்ச்சிதான் கடந்த 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

சமூக நீதி மாநாடு - மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கியது. மதியம் 12:30 மணி அளவில் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகள் ஜம்மு கஸராக தொழுது முடித்த பின் சரியாக 1:00 மணி அளவில் பொதுக்கூட்டம் தொடங்கியது. தேசிய ஒற்றுமை கீதமான "ஸாரே ஜஹான்ஸே அச்சா!" பாடலுடன் தொடங்கிய இப்பொதுக்கூட்டத்திற்கு தேசத்தின் பல பகுதிகளிலிருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

சமூக நீதி மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது! அல்ஹம்துலில்லாஹ்!

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாடு நேற்று காலை சரியாக 9:30 மணி அளவில் கொடியேற்றத்துடன் எழுச்சியோடு தொடங்கியது.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் இயக்கத்தின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சியோடு சமூக நீதி மாநாடு இனிதே தொடங்கியது.



பாப்புலர் ஃப்ரண்டிற்கு டெல்லி அருகிலேயே உள்ளது- இ.அபூபக்கர்


புதுடெல்லி: அரசியலில் சக்திப் பெறுவதன் மூலமாகவே முஸ்லிம்களுக்கு சமூக நீதி கிடைக்கும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் ஸாஹிப் தெரிவித்துள்ளார்.
abu

மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்


புதுடெல்லி: முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்கள் குஜராத்தில் அனைத்து வரம்புகளையும் மீறி வருகின்றன என பதேஹ்பூரி இமாம் முஹம்மது முகர்ரம் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.
vlcsnap-2011-11-28-08h36m26s118

பாப்புலர் ஃப்ரண்டின் லட்சியம் நிறைவேறும் – மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்


புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார்.
Mahant Acharya Ayodya

சமூக நீதி மாநாட்டின் புகைப்பட காட்சிகள்

இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தேசத்தின் தலை நகரமாம் டெல்லியில் நீதியின் போராளிகளாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பிரம்மாண்டமான் மாநாட்டின் புகைப்பட காட்சிகள். வாசகர்களின் பார்வைக்காக‌


ராம்லீலா மைதானத்தில் அலைகடலென குவிந்த மக்கள் வெள்ளம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாளான நவம்பர் 26ம் தேதி நேஷனல் மில்லி கன்வென்ஷன், மற்றும் நேஷன்ல செமினால் ஆகிய இரு கருத்தரங்கங்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான 27ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



வியாழன், 1 டிசம்பர், 2011

நீதிக்காக மக்களின் உரிமைகள் - கருத்தரங்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டின் முதல் நாளான 26ஆம் தேதி நவம்பர் 2011 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நீதியை பெறுவதும் மக்களின் உரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் துவங்கியது. இந்த கருத்தரங்கத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா அவர்கள் தலைமை தாங்கினார்.

பி.ஜே.பி. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது மக்களை ஏமாற்றும் வேலை


“பாரதிய ஜனதா  கட்சி ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் எதிராக குரல் கொடுப்பதாக காட்டி நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி வருகிறது. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலை காரணமாக வைத்து நடைபெறும் ஏமாற்று வேலையே தவிர வேறில்லை.
 
 

Social Justice Conference Documents

ஞாயிறு, 27 நவம்பர், 2011

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!


Healthy Diet Tips - Food Habits and Nutrition Guide in Tamil
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: 

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
பழங்கள் சாப்பிடும் முறை:
  
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். 
   
* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.  அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

கூடல் - 6 September, 2011
Do eggs lower cholesterol? - Food Habits and Nutrition Guide in Tamil
'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.
அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.
1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.
1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.
சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்

சமுதாய சொந்தங்களே…!

சமுதாய சொந்தங்களே…!

அஸ்ஸலாமு அலைக்கும்….

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட சமுதாயம் தன்னுடைய வரலாறு தெரியாமல் வாழ்ந்து வருகிறது.

ஆங்கிலேயர்களை விரட்டி அடித்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்.

ஆனால் இன்று அவை மறைக்கப்படுகிறது.

அதுமட்டும் அல்ல உலகிற்கு நன்மை செய்யும் முஸ்லிம்கள் பற்றியும் மறைக்கப்படுகிறது.

இதற்கு அடிப்படை காரணம் முஸ்லிம்களாகிய நாம் கூர்மை கொண்ட பத்திரிக்கை துறையில் இல்லாத ஒன்று தான்.

பத்திரிக்கை துறையில் நாம் இருந்தால், உண்மை செய்திகளை கொண்டு, நமது சமுதாய எழுச்சிக்கு வித்திடலாம்.

சுதந்திர தினத்தில் மருதநாயகம், திப்பு சுல்தான் போன்றவர்கள் வரலாற்றை கூறலாம்.

ஆவணப்படம் எடுத்து, இன்று முஸ்லிம்கள், உலக அரங்கில் படக்கூடிய கஷ்டங்களை சொல்லலாம்.

செய்யாத தவறுக்காக பல ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றியும், அவர்கள் குடும்பம் படும் இன்னல்கள் பற்றியும் எடுத்து சொல்லக்கூடிய கூர்மை ஆயுதம், இந்த காட்சி ஊடகமான பத்திரிக்கை துறை.


இன்று அந்த துறையில் இல்லாததன் விளைவு, முஸ்லிம்களுக்கு பத்திரிகைகள் பெயர் வைத்து இருப்பது தான் “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”.

இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஆதரிக்காத மார்க்கம்.

இந்த முஸ்லிம்கள் “தீவிரவாதிகள்” என்ற விஷபெயர் பத்திரிக்கை துறையில் மாற்றப்படவேண்டும்.

அதற்கு முஸ்லிம்களாகிய நாம் பத்திரிக்கை துறையில் சேர வேண்டும்.

இந்த துறைக்கு செல்வதற்கு நிச்சயம் நாம் அந்த துறைக்கு தேவையான படிப்புகள் படிக்க வேண்டும்.

இந்த படிப்புகள் இப்பொழுது மத்திய அரசால் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கப்படுகிறது.

ஒரு மாத பயிற்சியான இந்த படிப்பிற்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நேர் முகதேர்வு நடைபெறுகிறது.

மேலும் விபரங்களுக்கு:

NATIONAL FILM DEVELOPMENT CORPORATION,
CHENNAI.
044-28192506
044-28192407
044-28191427