நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 25 அக்டோபர், 2012

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் SDPI 50 தொகுதிகளில் தனித்து போட்டி

எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக மாநில செயற்குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார். கட்சியின் தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் கான் செயற்குழுவுக்கு தலைமை வகித்தார். 

மாநிலத் தேர்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி தெரிவித்தார். இந்தூரைச் சேர்ந்த முஹம்மத் சலீம் அன்சாரீ, அப்துர் ரவூஃப், குவாலியர் அப்துல் கனி, ஜபல்பூர் இர்ஃபானல் ஹக், தேவஸ் ஹஃபிஸ் ஷப்பீர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? - கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்


கர்நாடகா : பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலம் குல்பர்காவின் தேசிய கல்லூரியில் 19.10.2012 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் ஷாஹித் நஸீர்  வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில துணை தலைவர் அப்துல் வாஹித் சேட் தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில் " சிறுபான்மை மற்றும் ஏழை மக்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் போராடி வருவதால் அது குறிவைக்கப்படுகிறது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிமியின் மறு வடிவம் என்று கூறுபவர்கள் ஒரு விஷயத்தை சிந்திக்க மறந்து விட்டார்கள்.2001ல் தடை செய்யப்பட்ட சிமியின் மறுவடிவாக 1993ல் உருவாக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எவ்வாறு இருக்க முடியும்? "என்று குறிப்பிட்டார்.

திங்கள், 22 அக்டோபர், 2012

குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் !நீதிக்கான முழக்கம் - கோவை மண்டல மாநாடு : கோவை பகதூர்ஷா திடலில் திரண்ட மக்கள் வெள்ளம்

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு 21 .10 .2012 அன்று கோவையில் போத்தனூர் ரோடு - மைல்கல்லில் பகதூர்ஷா திடலில் வைத்து நடைபெற்றது.
இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் முபாரக் , பி.யு.சி.எல் துணை தலைவர் க.குறிஞ்சி , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி. மஹபூப் அன்சாரி பைஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?

இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?



சனி, 20 அக்டோபர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?

இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?



முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?




இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?

வெள்ளி, 19 அக்டோபர், 2012

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? சம நீதி மாநாடு - கேரளா மாநிலம் கொச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்

கேரளா : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேரளா மாநிலம் கொச்சியில் 18.10 .2012 அன்று நடத்திய சம நீதி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை குறித்து அவதொர்று பரப்புபவர்களுக்கு இம்மக்கள் வெள்ளம் தகுந்ததொரு பாடமாக அமைந்தது. மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் எந்தவொரு இயக்கத்தையும் தவறான பிரச்சாரங்கள் மூலம் தடுத்து விட முடியாது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தியது. தேச விரோத சக்திகளுக்கு தகுந்ததொரு எச்சரிக்கையையும் இம்மாநாடு விடுத்துள்ளது. 
மாநாடு நடைபெற்ற மெரைன் டிரைவ் பகுதிக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் மாநாடு

கோவை மண்டல மாநாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்டின் மாநில தலைவர் இஸ்மாயீல் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

கோவை (அக்டோபர் 19 , 2012) : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு நடைபெறுகின்றது . மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு இம்மாநாடு நடைபெறும்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஒடுக்கப்பட்ட சமூகங்களை கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து தளங்களிலும் சக்திப்படுத்த ஜனநாயக வழிமுறைகளில் போராடும் தேசிய அளவிலான ஒரு மக்கள் பேரியக்கமாகும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சக்திபெறுவதை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ப்ரண்டிற்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

புதன், 17 அக்டோபர், 2012

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குழு மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில் சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
சமநீதி மாநாடுகள் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்படும். கர்நாடகாவில் பெங்களூர், குல்பர்கா, மைசூர் மற்றும் மங்களூர் நகரங்களில் மக்கள் மாநாடுகள் நடத்தப்படும். ஆந்திராவின் குர்னூலில் மாநில மாநாடும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஒற்றுமை மாநாடும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது போன்ற பெரும் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டின் நிறைவை குறிக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களின் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் மக்கள் ஆதரவு மாநாடு தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெறும்.

திங்கள், 15 அக்டோபர், 2012

புளியங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்-பொதுக்கூட்டம்!


புளியங்குடி: நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக புளியங்குடியில் வைத்து ஏன் பாப்புலர் ஃப்ரண்ட்? துவக்க நாள் பொதுக்க்கூட்டம் 14 - 10 - 12 ஞாயிற்றுக்கிழமை அன்று 6.45 மணியளவில் நடை பெற்றது. இதில் புளியங்குடி நகரபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார்கள்.நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
Puliangudi Why Popular Front Campaign

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

"கல்விக்கூட ஜனநாயகம் காப்போம்" - கேம்பஸ் ஃப்ரண்ட்

வலிமையான ஜனநாயக கட்டமைப்பிற்க்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. முhணவ அரசியல் மூலம் மாணவர் நலன் சார்ந்த விஷயங்களிலும் தேசிய நலன் சார்ந்த விஷயங்களிலும் உரிமைகளை போராடி வென்றெடுக்க இயலும்.














கேம்பஸ்களில் ஜனநாயகத்தை  அணுமதிப்பது மாணவர்கள் கல்விக்கூட அரசியல் மற்றும் தேசிய அரசியலில் ஈடுபட பெரிதும் உதவும். சிறந்த அரசியல் தலைவர்களுடனான மாணவர் சந்திப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இதனை வலுப்படுத்தலாம்.

புதன், 19 செப்டம்பர், 2012

இனவெறி!, இஸ்லாத்திற்கு எதிரான கொலைவெறி!


இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறுகளும், அபாண்டங்களும் அள்ளி வீசப்பட்டு கொண்டிருக்கின்றன. எங்கோ இருக்கின்ற டென்மார்க் தொடங்கி அமெரிக்கா, இஸ்ரேல் என்ன? நம் கண் முன்னால் கடைகளில் தொங்கும்
ISLAMOPHOBIA

தினமலர் வரை கேலி சித்திரங்களும், தகாத தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அதன் உச்சகட்டமாக இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of Muslims’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ரயில் மறியல் போராட்டம் -SDPI

முஹம்மது நபியை அவர்கள் ஏன் வெறுக்கிறார்கள்...?

சமீபத்தில் இஸ்லாத்தின் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி ஒருவன் திரைப்படம் தயாரித்த விவகாரத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் கொதித்தெழுந்து அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அரசாங்கமோ இது தொடர்பாக கூறும்போது "எங்களது நாட்டில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது. யார் வேண்டுமானாலும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடலாம். அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் எனவே இது தொடர்பாக அமெரிக்க அரசு தலையிடாது எனவும் அவ்வாறு திரைப்படம் தயாரித்தவனை தண்டிக்கவியலாது" எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ள அதே சமயம் உலகில் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை மன்னிக்க மாட்டோம் எனவும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவந்து தண்டிப்போம் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் மக்களுக்காக ஈகை திருநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் வசூல் செய்த விவரம்


சனி, 15 செப்டம்பர், 2012

அப்பாவி சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மனித சங்கிலி போராட்டம்


அப்பாவி சிறைவாசிகளை பிணையில் விடுவிக்கக் கோரி சட்டப்படி பிணையில் விடு அப்பாவிகளை விடுதலை செய் என்ற முழகத்தை முன்வைத்து கடந்த 15.08.2012 முதல் 15.09.2012 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அதன் நிறைவாக டெல்லி (ஜந்தர் மந்தர்) மற்றும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டத்தை 15.09.2012 அன்ற ஒரே நேரத்தில் நடத்தியது.

    இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு நீதிக்கான போராட்டத்தில் தங்களின் கைகளும் துணை நிற்கும் என்பதை உறுதி செய்தனர்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் கடையநல்லூரில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்


                முஸ்லீம்கள் உயிரினும் மேலாக மதிக்க்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.




                இதனால் உலகம் முழுவதும் முஸ்லீம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.எகிப்து,லிபியா,யெமன்,துனீசியா,பாகிஸ்தான்,லெபனான்,சூடான்,இந்தியா,மெராக்கா, ஃபலஸ்தீன்,பங்களாதேஸ்,ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

புதன், 12 செப்டம்பர், 2012

முஸ்லிம் இளைஞர்களின் கைது: ஜோடிக்கப்பட்டது – மனித உரிமை ஆர்வலர்கள்!


முக்கிய பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி உயர் கல்வி கற்ற முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த கர்நாடகா போலீஸின் நடவடிக்கை அடுத்த தேர்தலை இலக்காக கொண்ட வகுப்பு பிரிவினைவாத அஜண்டா என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.




கோமு நல்லிணக்க பேரவையின் தலைமையில் பெங்களூர் ப்ரஸ் க்ளப்பில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மனித உரிமை ஆர்வலர்கள் கர்நாடகா க்ரைம் ப்ராஞ்ச் போலீசாரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர். போலீசார் பொய் கதைகளை இட்டுக் கட்டியுள்ளார்கள். எஃப்.ஐ.ஆர் மற்றும் போலீஸ் ஆவணங்களில்இருந்து இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று மூத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான வழக்கறிஞர் எ.கே.சுப்பைய்யா கூறினார்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

69% இடஒதுக்கீட்டை தக்க வைக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் செயலக கூட்டம் வேண்டுகொள்...

07-09-2012 அன்று மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலக கூட்டம் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் காலித் மற்றும் மாநில துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1950 யில் தமிழகத்தில் அமுலில் இருந்த வகுப்புரிமை ஆணையை எதிர்த்து செண்பகம் மற்றும் துரைராஜன் என்ற இரு மாணவர்கள் தங்களுக்கு கல்லூரியில் வகுப்புரிமை ஆணையினால் இடம் கிடைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது உயர் சாதியினருக்கு (பிராமணர்களுக்கு) மட்டுமே 14.29% இடஒதுக்கீடு அமுலில் இருந்த சமயத்தில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய சென்னை உயர் நீதி மன்றம் இவ்வழக்கை ஏற்று இரு மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காததால் வகுப்புரிமை ஆணையையே ரத்து செய்தது.

கூடங்குளம்​:போலீஸ் பயங்கரவாதம் ​-தெஹ்லான், நெடுமாறன், வேல்முருகன் கண்டனம்!


திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது அராஜக தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுஅப்பகுதியை கலவரக் காடாக மாற்றியுள்ள தமிழக ஜெயா அரசின் காவல்துறைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம்​-போலீஸ் பயங்கரவாதம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ, ம.ம.க சாலை மறியல்!


சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜக தாக்குதலை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட  எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளத்தில் இன்று காலை அமைதியான வழியில் போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்திய காவல்துறையினரை கண்டித்தும், இடிந்தகரை பகுதியில் இருந்து

வியாழன், 6 செப்டம்பர், 2012

பாப்புலர் ப்ரண்ட் நிர்வாகிகள் சந்திப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 2012 செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கீழ்கானும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மாநில தலைவர் A.S. இஸ்மாயில் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் S. பைசல் அஹமது செயற்குழு உடனே நிஜாம் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ரம்ஜான் பெருநாள் தினத்தன்று அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்க்காக தமிழகம் முழுவதும் மசூதிகளில் அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வசூல்செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூபாய் 39,95,121 வசூல் செய்யப்பட்டது. இத்தொகையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமையிடம் ஒப்படைப்பது என்றும் அஸ்ஸாம் நிவாரணமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தமிழகத்திலிருந்து ஒரு குழு நேரடியாக செல்வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சிவகாசி தீ விபத்து - நிவாரணப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்

மதுரை: 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள், அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ஃப்ர‌ண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்.

த சண்டே இந்தியன் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் கடிதம்

தாங்கள் செப்டம்பர் 16 தேதியிட்ட சண்டே இந்தியன் தமிழ் இதழில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் பார்த்து ஓர் அளவு சந்தோசமும் ஓரளவு கவலையும் பட்டுக்கொண்டேன்.ஏநென்றால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லாதது போலவும் முஸ்லிம்கள்தான் பிரச்சனைகளுக்கும் தீவிரவாதத்திர்க்கும் காரணம் என்பது போலவும் எழுதி வரும் மீடியா உலகில் அதற்க்கு சிறிது மாற்றமாக இந்தியாவில் 

முஸ்லிம்களும் ஏனய மக்களும் பிரச்சனைகளில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இருக்கும் சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் ஆதலால் நாம் போராட நாம் கவனம் செலுத்த இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது என்ற அறிவுருத்தலான செய்திகளையும் பார்த்த சமயம் ஓரளவு சந்தோஷ பட்டேன்.


செத்துருக்கலாமோ? நரகத்தின் நடுவில்..............





அஸ்ஸாமில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரோடிருக்கும் முஸ்லிம்களின் மனநிலைதான் மேலே கொடுக்கப்பட்ட தலைப்பின் வார்த்தை.ஏன் அடிக்கிறார்கள்? எதற்கு அடிக்கிறார்கள்? ஏன் ஊரை விட்டு வீட்டை விட்டு காலி செய்து வந்தோம் என பல கேள்வி கணைகளோடு அகதிகள் முகாமில் கலவரம் என்ற கோரதாண்டவத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் முஸ்லிம்களின் நிலையை பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அமைப்புக்களை கண்காணிக்கிறோம் நிறுவனங்களை கண்காணிக்கிறோம் என அரசாங்கத்தால் சொல்லப்படும் அமைப்புக்களும் நிறுவனங்களும் இல்லை என்றால் என்றோ இவர்களும் செத்து போயிருக்கலாம்.முகாமுக்கு வெளியேயான உலகம் குண்டுகளாலும் அம்புகளாலும் ஆனது என்றால் முகாமிற்குள்ளான வாழ்க்கையை நரகம் என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு மிக மோசமாகவும் இன்னொரு கொடுமைகளும்தான் அங்கு நடக்கிறது.
முகாம்களில் இருக்கும் ஒரு சில நிலைகளை அவர்களே கூறியதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் கலவர பூமியில் தீவிரமாக பணியாற்றும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள்!

கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன.
Rehab india volunteers working Actively in Assam relief camps2

இந்த முகாம்களில் 3,20,750 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரச்சனைகளால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருக்கும் 20 முகாம்களில் ரிஹாப் சேவைத் தொண்டர்களால் செல்ல இயலவில்லை. ஊடக செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அஸ்ஸாம்,மியான்மர் கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை: 2 பேர் பலி!


மும்பை:அஸ்ஸாம் கலவரம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்பு ஆகியவற்றை கண்டித்து ராஸா அகாடமி சார்பாக மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இச்சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Anti-Assam riot protest turns violent in Mumbai- 2 killed
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மியான்மரில் ராகேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அரசு உதவியுடன் புத்தர்கள் நடத்தி வரும் இன அழித்தொழிப்பைக் கண்டித்து மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் ராஸா அகாடமி என்ற அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்யகோரி நாடு தழுவிய பிரச்சாரம்-பாப்புலர் ஃப்ரண்ட்


மோட்சம் வேண்டுமா மோடியே...?



"குஜராத் இனக்கலவரம்" எத்துனை ஆண்டுகாலம் கடந்தாலும் இந்திய முஸ்லிம்களால் எளிதில் மறந்துவிட முடியாத ஒரு துயர சம்பவம். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியிலிருந்து அஹமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 56 பேர் உடல் கருகி உயர்ந்தனர். இதில் 56 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு தரப்பு செய்திகள் வந்தாலும் மறுதரப்பில் சிலர் உயிர் பிழைத்தனர் என்று கூறுகிறது.

பத்ர் தரும் பாடம்!

மனித குலத்திற்கு நேர்வழி காட்டும் புனித திருக்குர்ஆனை (2:185) இறக்கியருள அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் தான் ரமலான்.



மனித சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை  எக்காலத்திலும் உருவாக்கிக் கொண்டிருக்கும் புரட்சி வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன் லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, மனோ இச்சையில் இருந்து விடுதலை, உலகியல் வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில்  இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நரகில் இருந்து விடுதலை இவ்வாறு திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

"குஜராத் இனக்கலவரம்"



"குஜராத் இனக்கலவரம்" எத்துனை ஆண்டுகாலம் கடந்தாலும் இந்திய முஸ்லிம்களால் எளிதில் மறந்துவிட முடியாத ஒரு துயர சம்பவம். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியிலிருந்து அஹமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 56 பேர் உடல் கருகி உயர்ந்தனர். இதில் 56 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு தரப்பு செய்திகள் வந்தாலும் மறுதரப்பில் சிலர் உயிர் பிழைத்தனர் என்று கூறுகிறது.


வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மியன்மார்: உலக மனச்சாட்சி இறந்துவிட்டதா?


மியன்மாரில் (பர்மா) கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளும் வன்முறைகளும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஏன் பெறவில்லை என்பது ஆச்சரியமான கேள்வியாகவே உள்ளது.
Myanmar
இதுவரை சுமார் 20,000 முஸ்லிம்கள் -குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்டு- பதறப் பதறப் படு கொலைசெய்யப்பட்டுள்ளனர். உண்மையில்,கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் இடம்பெயர்ந்தோர் தொகை என்பவற்றை துல்லியமாக அறிய முடியாத நிலையே தொடர்கின்றது.

அஸ்ஸாம் கலவரம் - பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வீடு திரும்ப அரசு உதவ வேண்டும்!


அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகம் வலுவான கோரிக்கையை 


முன்வைக்கின்றது. அஸ்ஸாம் மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த கிராமத்தை விட்டு கலவரக்காரர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்குவதற்கு இடமின்றியும், உணவு உடை என எவ்வித அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யமுடியாமலும் நிவாரண முகாமை விட்டு பல மைல் தூரம் வசித்து வருகின்றனர்


மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!


தேசவிடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.


அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்


பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.


தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.

புனேயில் மலேகான் மாதிரி தொடர் குண்டுவெடிப்பு! – இருவர் காயம்!


புனே: மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுசீல்குமார் ஷிண்டேயின் வருகைக்கு சற்று முன்பு புனேயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏழு நிமிடங்களுக்கு இடையே நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதர 3 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கப்பட்டன.
Four explosions rock Pune
பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

செவ்வாய், 31 ஜூலை, 2012

நாகர்கோவிலில் வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல்!


நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி முஸ்லிம்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டம்2
இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் வாழும்  ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நள்ளிரவு 11 மணி அளவில் திரண்டு வந்து நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மக்களுக்காக உதவுங்களேன்...!


அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள். 
அரசு தரப்பு டி.ஜி.பி  ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.
அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களின் விபரம் வருமாறு:

திங்கள், 30 ஜூலை, 2012

இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ


புதுடெல்லி : அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இ.அபூபக்கர்
இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘இரு கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் ஆவர். மாநில அரசு கற்பனை எண்ணத்தை கைவிட்டு நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்பைச்சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிற இயக்க தலைவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்து அதன் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய செயல்களை ஒன்றினைந்து செயல்படுத்துவதற்காக ஒரு தலைப்பின் கீழ் விவாதம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடமும் நேற்றைய தினம் அண்ணா சாலையிலுள்ள வெல்லிங்டன் பிளாசாவில் வைத்து நடைபெற்றது.



அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!


அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

                           அஸ்ஸலாமு அலைக்கும்!

இறையருள் அதிகம் பெருவதற்காகவும், நன்மைகளை அள்ளிக்கொள்வதற்காவும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனித மிகு ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்றோம். இந்த சிறப்பான தருணத்தில் ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன்.

இன்றைய காலகட்டத்தில் அரபு உலகம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக ஜனநாயகம் அமைந்துள்ளது என்பதை  எவறாலும் மருக்கவியலாது. இன்றைய காலகட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடும் தன்மை எல்லா நேரங்களிலும் வெற்றியை அளிப்பதில்லை என்பதை சமீபத்திய‌ நாட்களில் நிறைய உதாரணங்களை நம்மால் காண முடியும்.