நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

தொடர் குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர்.  83 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .

இறந்த பதினைந்து அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . இதைப் போன்ற தாக்குதல்கள் மக்களிடையே அமைதியின்மையையும் ,நல்லிணக்கத்தையும் குலைக்கின்றன. இத்தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு தீய சக்திகளின் சதிகளை முறியடிக்க வேண்டும் .

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை"

தமிழ் திரைப்படத் துறையில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. 
அண்மையில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் உலக மக்களுக்கு நல்லுபதேசமான இறை வேதம் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் வழிப்பாட்டு முறைகள் தீவிரவாதத்தை தூண்டுவதாக சித்தரித்தது.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஷிண்டேவின் முரண்பட்ட கருத்துகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு.சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் பி.ஜே.பி குறித்து தான் வெளிப்படுத்திய கருத்துகளிலிருந்து பின்வாங்கும் விதமாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் “சிந்தன் சிபிர் கூட்டத் தொடரில்” கருத்துக்களை வெளியிட்டிருப்பதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

மாலேகான் தொடங்கி சம்ஜவ்தா குண்டுவெடிப்புகள் வரை நடத்தியவர்கள் குறித்த உண்மைகளை வெளியிடுவதற்கு இன்னும் பொருத்தமான வார்த்தைகளை வேண்டுமானால் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் எத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தினாலும் நூற்றுக்கணக்கனோர் படுகாயமடைவதற்கும், கொல்லப்படுவதற்கும் காரணமான இக்கொடூரகுற்றங்களுக்கு பின்னால் ஹிந்துத்துவவாதிகளின் கைகள் இருப்பதனை மறைக்க இயலாது .

திங்கள், 18 பிப்ரவரி, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

டெல்லி :-  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .        

அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி மற்றும் வாகனப் பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் - நெல்லை மேற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

கடையநல்லூர்:- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் தாம்பரம், திருச்சி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் "யூனிட்டி மார்ச்" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.