நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 14 ஏப்ரல், 2012

மீண்டும் பார்ப்பண ஆயுதத்தை கையிலெடுக்கும் காங்கிரஸ்: ராகுலின் அரைவேக்காட்டுத் தனம்!


டெல்லி:காங்கிரஸ் கட்சி பார்ப்பணர்களின் ஆதிக்க கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்க தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக டெல்லியில் அண்மையில் ராகுல்காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாதி ஆயுதம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல்காந்தி சட்டென “நான் ஒரு பிராமின்… அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்” என்று கூறியுள்ளார்.
i am a bramin - Rahul
உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் தோழன் வேடம் போட்ட காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பல வித்தைகளை பயிற்றுவித்த போதும் எதுவும் சாதிக்க இயலவில்லை. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு, தலித்துகளின் குடிசைக்குள் திடீரென நுழைந்து சாப்பிடுதல் போன்ற நாடகங்களை மேற்கொண்டபோதும் மக்களின் விழிப்புணர்வால் காங்கிரஸால் சிறுபான்மை, தலித்து வாக்குகளை பெற இயலாமல் போய்விட்டது.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

மஸ்ஜிதிற்குள் நாய், பன்றியின் உடல்களை வீசி வன்முறைய தூண்ட முயற்சி


ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்குள் நான்கு மஸ்ஜிதுகள் வன்முறையாளர்களால் அசுத்தமாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அமைதிகாத்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக காவல்துறையினர் கூடுதலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

காரணங்கள் மாறுகின்றன ஆனால் கலவரம் ஒன்றே!


ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள மதண்ணாபேட் மற்றும் சயீதாபாத் பகுதிகளில் வகுப்புக்கலவரம் நடந்து வருகிறது.

அங்குள்ள அனுமார் கோவிலில் மாட்டு இறைச்சி துண்டுகளை போட்டதால் கலவரம் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கலவரம் பரவ காரணம் வி.ஹெச்.பி ஹிந்துத்துவா இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சிதான் முக்கிய காரணமாக அமைந்தது என்கிற குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது.

ஓதே கூட்டுப் படுகொலை:18 பேருக்கு ஆயுள்!


அஹ்மதாபாத் : 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஆனந்த் மாவட்டம் ஓதேவில் 23 முஸ்லிம்கள் கொடூரமாக உயிருடன் எரித்துக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் 18 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.
Police escort accused persons
கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முதல்வர் மோடியின் ஆசிர்வாதத்துடன் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலை இந்திய வரலாறு காணாத மிகவும் கொடூரமானதாகும். அவ்வேளையில் ஆனந்த் மாவட்ட  ஓதேவில் வெறியுடன் நுழைந்த காவி வெறியர்கள் முஸ்லிம்களை கொலைச்செய்ய தேடினர். அப்பொழுது சங்க்பரிவார கயவர்களுக்கு பயந்து 3 மாடிக் கட்டிடத்தில் உயிருக்கு அஞ்சி பதுங்கியிருந்த 23 பேரை கண்டனர். அவர்கள் இருந்த வீட்டை ஹிந்து வெறியர்கள் ஈவு இரக்கமின்றி எரித்தனர். இதில் 9 குழந்தைகள் உள்பட 23 பேர் எரிந்து பலியாகினர்.

புதன், 11 ஏப்ரல், 2012

பாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு யாத்திரை

புதுடெல்லி: இன்று தீவிரவாத தாக்குதல்களும், சட்டவிரோத கைதுகளும் தேசத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அதேசமயம் தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் உருமாறி வருகின்றது என்பதை நாம் அறிவோம். தீவிரவாத தாக்குதல்களினாலும், சட்ட விரோத கைதுகளாலும் சகோதரத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்திருக்கின்றனர். அத்தோடுமட்டுமல்லாமல் இரு சமூக மக்கள் மத்தியில் தங்களது கஷ்டங்களையு, பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டு மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்திருக்கின்றனர். இது தான் நம் இந்திய தேசத்தின் பல நூற்றாண்டுகளின் வரலாறு. இப்பேற்பட்ட ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் வேறு எந்த தேசத்திலும் கண்டுவிடமுடியாது.


சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்டது - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு!

ஹைதராபாத்: ஆந்த்ராவில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் அரசாங்கம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது என்பதை கடந்த சில மாதகாலமாக நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ் அரசாங்கம் காவல்துறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து செயல்படுத்துவதற்கு தவறிவிட்டது. சமீப காலங்களில் நடைபெற்ற அனைத்து வகுப்புவாத வன்முறை சம்பங்களின் போது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வேடிக்கை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்திருக்கின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். அப்பேட்டியின் போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் ரெட்டி முஸ்தாக் அஹமது உடன் இருந்தார்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்


சிமிக்கு எதிரான ஆதாரம் மீர்ஸா காலிபின் கவிதை வரிகள்: மஹராஷ்ட்ரா போலீஸின் மடமை!


புதுடெல்லி:இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் மீதான அநியாய தடையை நீட்டிப்பதற்கு மஹராஷ்ட்ரா போலீஸ் தீர்ப்பாயம்(ட்ரிப்யூனல்) முன்பாக ஆதாரமாக சமர்ப்பித்தது 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல பாரசீக கவிஞர் மீர்ஸா காலிபின் கவிதை வரிகளாகும்.
Mirza Ghalib
சிமிக்கு இரத்தத்தை ஓட்டுவதற்கு அலாதி பிரியம் ஏற்பட தூண்டுகோலாக அமைந்த இலக்கியம் என்று கூறி மீர்ஸா காலிபின் கவிதையின் ஒருபகுதியை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஸாலி தலைமையிலான தீர்ப்பாயம் முன்பு சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக காலிபின் கவிதை வரிகளை மராத்தி மொழியில் தவறாகவும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!


சென்னை : இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
 Tsunami
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானதால் நிலநடுக்கம் மிகக் கடுமையாக உணரப்பட்டது.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சென்னை: மத்தியிலும் மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று 5 மண்டலங்களில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்க இருக்கிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், செயலாளர் முஹம்மது ஷேக் அன்சாரி, சென்னை மாவட்ட தலைவர் ஜே.முஹம்மது நாஜிம் மற்றும் செயலாளர் ஷாஹித் ஆகியோர் கலந்து கொண்டனர். திரளான பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டு மாநில தலைவரிடம் பேட்டி கண்டனர்.


எண்ணெயை ஏற்றுமதி செய்யாமலும் ஈரானால் முன்னேற முடியும் – நஜாத்!


டெஹ்ரான்:கச்சா எண்ணெய் ஏற்றுமதி இல்லாவிட்டாலும் ஈரானுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற இயலும் என்று அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.
Iran's Mahmoud Ahmadinejad says they can withstand oil embargo for '2 to 3 years'
ஐரோப்பிய யூனியனின் தடையை கண்டித்து கிரீஸ் நாட்டிற்கு எண்ணெய் ஏற்றுமதிச்செய்வதை செவ்வாய்க்கிழமை ஈரான் நிறுத்தியது. பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளுக்கு எதிராக எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திவிட்டு தடைக்கு பதில் தடையை விதிப்போம் என்று கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்

மங்களூர்: இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாணவர் இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பிரதிநிதிகளின் கூட்டம் மங்களூர் டவுண்ஹாலில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. 
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய ஆலோசனைக்குழு தலைவர் அனீஸ் அஹமது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மாணவர்கள் மத்தியில் அரசியல் சக்தியை உருவாக்கும் இயக்கங்கள் மத்தியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னின்று செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஹைதரபாத் கலவரத்தை தூண்டியது தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சு!


ஹைதராபாத்:ஹைதராபாத் பழைய நகரத்தில் வகுப்புக்கலவரம் பரவ காரணம் வி.ஹெச்.பி ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவின் வெறியூட்டும் உரைதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹைதரபாத் கலவரத்தை தூண்டியது தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சு
தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சுக்கு பிறகு வி.ஹெச்.பி தலைவர் கோவிந்த்சிங், குர்மாங்குடாவில் பா.ஜ.க கவுன்சிலர் ஸஹதேவ் யாதவ் ஆகியோரின் தலைமையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர் என்று ஹைதராபாத்தில் மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் கண்காணிப்பு கமிட்டி போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளது.

உமர் சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிட இஃவானுல் முஸ்லிமீன் எதிர்ப்பு!


கெய்ரோ : பதவி விலகிய எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் உளவுத்துறை தலைவரும், முன்னாள் துணை அதிபருமான உமர் சுலைமான எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இஃவானுல் முஸ்லிமீன் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
Omar Suleiman criticises Muslim Brotherhood
உமர் சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது எகிப்திய மக்களை அவமதிக்கும் செயலாகும் என்று இஃவான்களின் தலைவர்களில் ஒருவரும், அதிபர் பதவி வேட்பாளருமான ஹைராத் அல் ஷாத்திர் கூறியுள்ளார்.

திங்கள், 9 ஏப்ரல், 2012

பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு

மத்தியிலும், மாநிலத்திலும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தி யா நடத்தும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இதற்கான பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நாளை ஏப்ரல் 10 அன்று  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் காலை 11 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சிக்கு தங்கள் பத்திரிக்கை நிருபரையும், புகைப்பட கலைஞரையும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்..

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். 
     ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும், இந்தியாவிலிருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சக்தி பெற்ற முஸ்லிம்கள், கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய ஹஜ் பயணத்திற்கு அதற்கான பயண செலவுகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் மானியம் வழங்கி வருகிறது.
     
இந்நிலையில் சிலர் காழ்ப்புணர்வுடன் ஹஜ் பயண மானியம் குறித்து சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். 
    

ஹைதராபாத் கலவரம்: மௌலானா நசீருதீன் வீட்டுக்காவலில்


ஹைதராபாத் : ஹைதராபாத்தில் நடந்த கலவரத்தில் காவல்துறை ஒருசார்புடன் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனை அறிவிக்கும் விதமாக மௌலானா நசீருதீனை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலவரத்தைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மௌலானா நசீருதீனை காவல் நிலையத்திற்கு அழைத்து அவரை வீட்டினுள் இருக்குமாறு கூறியுள்ளனர்.
naseer
மௌலானா நசீருதீனை காவல்துறை அழைத்து பேசியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. மேலும் பத்திரிக்கையாளர்கள் அவரின் குடும்பத்தினரை அணுகியுள்ளனர். அவரின் குடும்பத்தினர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள செய்தியில் நசீருதீனை அழைத்து தற்போதைய சூழ்நிலைக் குறித்து  காவல்துறையினர் பேசியுள்ளனர் என்றனர்.

மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ...12 நாட்களே உள்ளன .......

 பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா  நடத்தும் முஸ்லிம்களின் இட ஒது கீட்டிற்கானமாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ...
22 Appril 2012

                           கோவை / தஞ்சை / சென்னை / மதுரை / நெல்லை 
இன்னும் 12 நாட்களே உள்ளன .... 



இவண்...
                  

             மக்கள் தொடர்பு அலுவலர்
             பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம்
*            தமிழ்நாடு.
*           தொடர்புக்கு : 00919789112841*
*           மின்னஞ்சல் :  pronellaiwest@gmail.com
*           வெப்தளம்    : http://popularfrontnellaiwest.blogspot.in/

சங்கரரெட்டி வகுப்புவாத வன்முறை - உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை

மேடக்: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டம் சங்கரரெட்டியில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
சிவில் லிபர்டீஸ் மானிடரிங் கமிட்டி சார்பாக பேராசிரியர் ரெஹ்னால் சுல்தானா, லத்தீஃப் முஹம்மது கான், கனீஸ் ஃபாத்திமா, மண்டகினி, மசூது, முஹம்மது இஸ்மாயில் கான் ஆகியோரை உண்மை கண்டறியும் குழுவாக நியமித்து வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்த பின் தங்களுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!


ஹைதராபாத் : வகுப்புவாத கலவரத்தை தொடர்ந்து ஹைதராபாதில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஏராளமானோருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது.

நேற்று காலை 9 மணியளவில் ஹைதராபாத் புது நகரம் அருகே உள்ள மதன்பேட், சைதாபாத், குர்மகுடா ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பஜ்ரங்தள் இயக்கத்தைச்சேர்ந்த குண்டர்கள் சிலர் குர்மகுடா அருகேயுள்ள ஹனுமன் மந்திர் எனும் இடத்திலிருந்து பேரணியாக வந்தனர். ஹனுமன் மந்திர் அருகே முஸ்லிம்கள் மாட்டு இறைச்சியை வீசியதாக கூறி முஸ்லிம்களை எதிர்த்து பேரணி நடத்தினர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நியூ யார்க் ரெட்டை கோபுர தாக்குதல் இஸ்ரேலின் திட்டமிட்ட சதியே


மாவீரன் திப்பு சுல்த்தான் ஒரு வரலாற்று பார்வை.

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. 1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.


1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம். மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான்.

உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.


புதுடெல்லி : தீவிரவாத முத்திரைக் குத்தி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.
Sajjadur Rehman, Khalid Mujahid and Tariq Qasmi being taken to the court
2007-ஆம் ஆண்டு உ.பியில் லக்னோ, ஃபைஸாபாத், வாரணாசி ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத குற்றத்தை வாபஸ் பெற அரசு நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.