நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது.
 சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

புதன், 15 ஜனவரி, 2014

செல்போனின் முக்கிய எண்கள்

செல்போனின் முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய

உணவில்லை: யர்முக் முகாமில் 41 ஃபலஸ்தீனர்கள் மரணம்!

டமஸ்கஸ்: உணவும், மருந்தும் கிடைக்காததால் சிரியாவில் உள்ள யர்முக் அகதிகள் முகாமில் கடந்த 2 வாரங்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஃபலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். 
Photo: யர்முக் முகாமில் உணவில்லாமல் 41 ஃபலஸ்தீனர்கள் மரணம்!

உணவும், மருந்தும் கிடைக்காததால் சிரியாவில் உள்ள யர்முக் அகதிகள் முகாமில் கடந்த 2 வாரங்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஃபலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு டமாஸ்கஸில் யர்முக் முகாம் அடங்கிய பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு சிரியா ராணுவம் முகாமிற்கு உணவை கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.

ஊட்டச்சத்துக் குறைவினால் 24 பேர் மரணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிட்சை கிடைக்காததால் மரணித்துள்ளனர். லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

யர்முக்கில் ஃபலஸ்தீன் மக்களுக்கான முகாமின் சூழல் மோசமாக உள்ளதாக ஃபலஸ்தீன் மக்களுக்கான ஐ.நா ஏஜன்சி எச்சரிக்கை விடுத்தபோதும் சிரியா அரசு புறக்கணித்து விட்டது.

முகாமிற்கு உணவும், குடிநீரும் செல்வதை சிரியா சர்வாதிகார அரசு தடுத்துள்ளது. போராளிகளுக்கு ஃபலஸ்தீன் மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பது சிரியா சர்வாதிகார அரசின் குற்றச்சாட்டாகும். அதேவேளையில் ஹும்ஸில் ராணுவத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமா, இத்லிப், ஹலப், தர்ஆ ஆகிய இடங்களில் மரணித்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு டமஸ்கஸில் யர்முக் முகாம் அடங்கிய பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு சிரியா ராணுவம் முகாமிற்கு உணவைக் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.

நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! சபாஷ்!!!

ஊடகங்களை விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார் உண்மை வார்த்தைகள் மூலம்..! நீதிபதி மார்கண்டேய கட்ஜு.
நமது மீடியா மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை செய்கிறது. பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா.
சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.
மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

வளர்ச்சியின் பலன் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை – பிரதமர் ஒப்புதல்!

புதுடெல்லி: நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு வளர்ச்சியின் பலன் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.அனைத்து சிறுபான்மை மக்களையும் ஒரே பிரிவாக காணமுடியாது. சில பிரிவினர் மிகவும் முன்னேறியுள்ளனர். 
Ma
ஆனால், முஸ்லிம்களின் நிலைமாறுபட்டது என்று அவர் கூறினார். டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தின் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்றுப் பேசியதாவது: இந்தியா போன்ற பாரம்பரியம்மிக்க நாட்டில் மதச்சார்பற்ற தன்மையை வாழ்க்கையுடன் இணைத்து மக்கள் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இதுதான் இந்தியாவின் பலமாக கருதப்படுகிறது.

திங்கள், 13 ஜனவரி, 2014

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
நெல்லை மேற்கு மாவட்ட பொருப்பாளர் தென்காசி மீரான்
இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒரு கோடி ருபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க

சனி, 11 ஜனவரி, 2014

“இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” – அபூதபியில் EIFF நடத்திய நிகழ்ச்சியில் SDPI மாநிலத் தலைவர் சிறப்புரை!

அபூதபி: அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அபூதபி ஏர்லைன்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று (10.01.2014) பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. 
சிறப்புரையாற்றும் SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி
அதில் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

பி.ஜே.பி யின் பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டுவோம் ! ஃபாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு !

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. 
சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து

வியாழன், 9 ஜனவரி, 2014

அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் - பாப்புலர் ஃப்ரண்ட்!

முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தீவிரவாதிகள் தொடர்பு கொண்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று டெல்லி சிறப்பு காவல்படை ஆணையர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். 
இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் ஏற்கனவே முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மென்மேலும்

புதன், 8 ஜனவரி, 2014

முஸ்லிம் சிறுவனின் வாயில் சுட்ட போலீஸ்:சென்னையில் பரபரப்பு!

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரியின் வாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டத்தில் தொண்டையில் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அந்தச் சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக இமாம்கள் சந்திப்பு நிகழ்சி....

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இமாம்கள் சந்திப்பு நிகழ்சி நடைபெற்றது.

திங்கள், 6 ஜனவரி, 2014

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்! இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… 


பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டர் தற்போது ஆண்டுக்கு

நியாயமான கோரிக்கை

செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலை....

செங்கோட்டையில் 21வது வார்டு துப்புரவு செய்யமலிருந்த பகுதியை. எஸ்.டி.பி.ஐ.கவுன்சிலர் சாகுல்ஹமீது பாதுஷா அவர்களின் முயற்சியால் சுத்தம் செய்யப்பட்டது.


முகைதீன் பாதுஷா's photo.முகைதீன் பாதுஷா's photo.முகைதீன் பாதுஷா's photo.
மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் கண்டுகொள்ளத 21வது வார்டில் அண்ணாநகர தெருவில் உள்ள ஓடை பாலம் உடைந்து அதை பார்வையிடும் எஸ்.டி.பி.ஐ. நகரசெயளாலர் அஸ்கர் அலி மற்றும் ஜாபர் அவர்கள்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக மக்கள் மாநாடு:பாப்புலர் ஃப்ரண்ட்,எஸ்.டி.பி.ஐ உள்பட பல கட்சிகள்,இயக்கங்கள் பங்கேற்ப்பு


நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 04.01.14 அன்று அணுவுலை எதிர்ப்பு மாநாடு துவங்கியது.இந்த எதிர்ப்பு மாநாட்டில் அணுவுலை எதிர்ப்புகுழு தலைவர் உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்,அணுவுலை எதிர்ப்புகுழுநிர்வாகி புஷ்பராயன் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.இந்த மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S இஸ்மாயில்,எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி ,விடியல் வெள்ளி பத்திரிக்கை துணை ஆசிரியர் ரியாஸ் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் நவவி உள்ப்பட அனைத்து கட்சிகள்,இயக்கங்கள் ,சமுக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கொலம்பஸிற்கு முன்பே அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்தார்!


வாஷிங்டன்: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாலுமியும், தேடலாய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரபல கணித மேதையும், விஞ்ஞானியுமான அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்துள்ளார் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்டரி டுடே பத்திரிகையில் பிரபல அமெரிக்க ராஜீய வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான ஃபெடரிக் இதுக்குறித்து ஆய்வை வெளியிட்டுள்ளார்.


சனி, 4 ஜனவரி, 2014

முஸ்லிம் மாணவிகளின் திறமையை வளர்க்க 978 கோடி திட்டம்!

இந்தியாவில் 14 வயதுக்கு மேலான முஸ்லிம் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் மத்திய அரசு ரூ. 978 கோடி மதிப்பிலான திட்டத்தை தயாராக்கியுள்ளது. திறமை என்ற பொருள்படும் HUNAR என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டம் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
girls

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெற்றோர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா சார்பாக 01-01-2014 புதன் அன்று நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.