நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 டிசம்பர், 2011

முர்ஷிதாபாத்தில் ரிஹாப் சார்பாக 3 திட்டங்கள் துவக்கம்


கொல்கத்தா : கல்வி வளர்ச்சி, அடிப்படை வசதிகள், சுய தொழில் உதவி ஆகிய துறைகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு சாரா அமைப்பான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் நடத்தும் நீண்டகால திட்டங்களின் ஒரு பகுதியாக 
கம்யூனிட்டி செண்டர்கள், குடிநீர்திட்டம், வட்டியில்லா சிறுகடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில் ரிக்‌ஷா விநியோகம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஃபவுண்டேசனின் சேர்மன் இ.அபூபக்கர் துவக்கி வைக்கிறார்.

2011:வன்முறைகள் பெருமளவு குறைந்துள்ளது – ப.சிதம்பரம்


P-Chidambaram
மும்பை : 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெருமளவு குறைந்திருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜம்மு-கஷ்மீர் மாநிலம், வடகிழக்கு மாநிலங்கள், நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் வன்முறை வெகுவாக குறைந்திருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஹமீது அன்சாரி மீது அபாண்டம்: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்


hameed ansari
டெல்லி : இந்திய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீது அன்சாரி மீது பா.ஜ.க அபாண்டமாக பழி சுமத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் லோக்பால் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கூச்சல், குழப்பம் நிலவியதால், ஹமீது அன்சாரி காலவரையறையின்றி அவையை ஒத்திவைத்தார்.

‘ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி


ross-caputi
லண்டன் : ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது. அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தனர். மேலும் அந்த நகரில் வாழும் மக்களை கேன்சர் நோய்க்கு ஆளாக்கியதுடன் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறையுடனேயே பிறக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

தானே புயல் கோரத்தாண்டவத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் சின்னாபின்னமானது


கடலூர் : தானே புயல் கோரத்தாண்டவத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் சின்னாபின்னமானது. மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான படகுகள் நொறுங்கின. புதுச்சேரி தெருக்கள் எல்லாம் அலங்கோலமாயின.

குழந்தைகளின் படிப்பிற்காக தாரளமாக உதவி செய்யுங்கள்

புதுடெல்லி :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோரும் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. "ஸ்கூல் சலோ"  (பள்ளி செல்வோம்!) என்ற கோஷத்தோடு ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் கல்வியை தொடர முடியாத பிள்ளைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்!

20 டிசம்பர் 2011 முதல் 10 ஜனவரி 2012 முதல் நடக்கும் இப்பிரச்சாரத்தில் பல்வேறு விதமான பணிகளை செய்வதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருக்கிறது.


அஹமதாபாத் குண்டுவெடிப்பில் முஸ்லிம் இளைஞர் கைது.

புதுடெல்லி :  கடந்த 2008ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி மெளலானா ஹபீஃப் ஃபலாஹி என்ற 26 வயது முஸ்லிம் இளைஞர் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

போஸ்னியாவில் முஸ்லிம்-க்ரோட்-ஸெர்ப் கூட்டணி அரசு


ஸராயவோ : 14 மாதங்களாக தொடரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவர முஸ்லிம்-க்ரோட்-ஸெர்ப் கூட்டணி அரசை உருவாக்க தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்க புதிய பட்ஜெட்டை நிறைவேற்றவும் கட்சிகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் உறுப்பு நாடாக மாறும் போஸ்னியாவின் முயற்சி எளிதாகும்.

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் உதவிகள் விநியோகம்


ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் சேர்மன் இ.அபூபக்கர் உதவிகளை வழங்கினார்.
புதுடெல்லி : ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அரசு சாரா அமைப்பான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், டெல்லியில் தேர்வுச் செய்யப்பட்ட நபர்களுக்கு வட்டியில்லா கடன் உதவியும், சுயதொழில்
புரிவதற்கான உபகரணங்களை வழங்கியது.

வியாழன், 29 டிசம்பர், 2011

கடையில் விவரம் தந்தால் போதும் ரேஷன்கார்டு புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் தொடக்கம்...


சென்னை : ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கிறது. பொருள் வாங்கும் கடையிலேயே விவரத்தை சொல்லி புதுப்பித்துக் கொள்ளலாம். குடும்ப தலைவர் போக வேண்டிய கட்டாயமில்லை.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் வரும் 2012 ஜனவரி 1ம் தேதியில் இருந்து 2012 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் மற்றும் அரசுப் பணிகளில் சிறுபான்மையினருக்கு தனி ஒதுக்கீடு - பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டு!





புதுடெல்லி : 22.12.2011 அன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவில் உள்ள முக்கிய அம்சங்களை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலர்கள் கூட்டம் கூறியுள்ளது. ஊழலுக்கு எதிரான சட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்ததுடன் லோக்பால்-லோக் ஆயுக்தா ஆகியவற்றில் 50%த்தை எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

தொகாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்

கோழிக்கோடு :  விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான பிரவீன் தொகாடியா மீது மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.



ஏழைகளுக்கு கம்பளி போர்வைகளை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்



குல்பர்கா :  கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக குல்பர்கா மாவட்டத்தில் ஏழைகள் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கம்பளிப்போரிவைகளை வழங்கியது.

செய்தியாளர்களின் கேள்விகளால் திணறிய ஹஸாரே


19864_L_anna-hazare
மும்பை : வலுவான லோக்பால் மசோதாவிற்காக மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹஸாரே மக்கள் ஆதரவு குறைவு மற்றும் உடல்நிலை சீர்குலைவு ஆகிய காரணங்களால் 3 நாட்கள் உண்ணாவிரதத்தை 2 நாளில் கைவிட்டார்.
இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஹஸாரேவை நோக்கி

ஒ.பி.சி உள் ஒதுக்கீடு: சிறுபான்மை மக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே


salman kurshid
புதுடெல்லி : மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தற்போதையை 27 சதவீத ஒ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இட ஒதுக்கீட்டில் அளிக்கப்பட்டுள்ள 4.5 சதவீத உள் ஒதுக்கீடு சிறுபான்மை
மக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது.

தடை ஏற்படுத்தினால் ஹோர்முஸ் கடல் வழியை மூடுவோம்-ஈரான் எச்சரிக்கை


hormuz
டெஹ்ரான் : அணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது தடைகளை திணித்தால் வளைகுடா நாடுகளின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி வழியான ஹோர்முஸ் கடல் பகுதியை மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் துணை அதிபர் அலி ராஹிமி இந்த எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு விடுத்துள்ளார்.இச்செய்தியை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னா வெளியிட்டுள்ளது.

கைவிரல் நகங்கள் நிறமாற்றம்: இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறி!


Commonnailproblems_1
சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும்.
அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.

இடஒதுக்கீடு: ஏன் இந்த கொல வெறி?


இடஒதுக்கீடு ஏன் இந்த கொல வெறி
சிறுபான்மை சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இத்தீர்மானத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியும், சங்க்பரிவார அமைப்புகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது SDPI





உத்தம பாளையத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது SDPI  .அதனை பற்றி பத்திரிக்கையில் வந்த செய்திகள் 

கேரள அரசை கண்டித்து கோவையில் ரயில் மறியல் 133 பேர் கைது

கோவை : பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து கோவையில் ரயில் மறியல் செய்ய முயன்ற சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா(எஸ்டிபிஐ) அமைப்பை சேர்ந்த 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசை கண்டித்தும், தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்தும், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் கோவையில் ரயில் மறியல் போராட்டம் 26ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வரலாற்றின் வேர்கள்!


வரலாற்றின் வேர்கள்.!
வரலாற்று பக்கங்கள்  இரண்டு நிறங்களை கொண்டதாகும் முதலாவதானது கருப்பு அது அறிவு ஜீவிகளின் பேனா மை இரண்டாவதானது சிகப்பு அது தியாக செம்மல்களின் செங்குருதி இப்படியான இரண்டு மைகளையும் உள்ளடக்கியது தான் முஸ்லிம்களின்  கடந்த கால வரலாறு.
முஸ்லிம்கள் எட்டு திக்கிலும் வீறு கொண்டு வெற்றி முரசு கொட்டிய காலத்தை நாம் உற்று நோக்கினால்

திங்கள், 26 டிசம்பர், 2011

அறிந்து கொள்ளுங்கள்

,e;jpahtpd; kj;jpa murpd; cau;fy;tpj;Jiwhay; cUthf;fg;gl;l gy kj;jpa gy;fiyf;foq;fs; ,aq;fp tUfpd;wd. me;j gy;fiyf;fofq;fs; gw;wpa tptuq;fis ghh;g;Nghk;.
vz;
kj;jpag; gy;fiyf;foq;fs;
khepyk;
efuk;
1
இங்கிலிஷ் அன்ட் பாரின் லேங்குவேஜஸ் யுனிவர்சிட்டி
ஆந்திரப்பிரதேசம்
ஹைதராபாத்
2
மவுலான ஆசாத் நேஷனல் உருது பல்கலைக்கழகம்
ஆந்திரப்பிரதேசம்
ஹைதராபாத்
3
யுனிவர்சிட்டி ஆப் ஹைதராபாத்
ஆந்திரப்பிரதேசம்
ஹைதராபாத்
4
ராஜீவ் காந்தி யுனிவர்சிட்டி
அருணாச்சல பிரதேசம்
இட்டாநகர்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

கேரளாவுக்கு அறிவுரை வழங்க பிரதமரிடம் ஜெ.கோரிக்கை


Tamil Nadu Chief Minister J. Jayalalithaa receives Prime Minister Manmohan Singh at the Chennai Airport on Sunday. Also seen is Governor K. Rosiah.
சென்னை : புதுடெல்லியிலிருந்து நேற்று சென்னை வந்த பிரதமரிடம் 16 பக்கங்களை  கொண்ட கோரிக்கை மனுவை அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சி எதையும் செய்யக்கூடாது என கேரள  அரசுக்கு அறிவுரை கூற கோரிக்கை விடுத்தார்.
நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை

ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் உறவு:நான் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது – திக் விஜய்சிங்


ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா  ஹஸாரே
புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா  ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.
இந்நிலையில் அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலத்தில் 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பரிதாபம்: பழவேற்காடு ஏரியில் மூழ்கி 22 பேர் பலி



AVN_PULILOCALHELP_874401g
சென்னை : கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகில் சென்றபோது, இந்த கோர விபத்து நடந்தது.  இவ்விபத்தில் 22 பேர் பலியாகி  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மழை நீர் தேக்கத்தை SDPI கவுன்சிலர் நயினாமுஹம்மது (எ) கனி அவர்கள் அகற்றிய போது....


கடையநல்லூர் -   மதீனா நகர் மேற்குப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக குளம்போல் தேங்கிகிடந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் சிரமமாகவும், மேலும் கொசுத்தொல்லை மற்றும் சில வகையான நோய்பரவக்கூடிய இடமாகவும் இருந்து வந்தது. இதனை அறிந்து பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதி 29 - வார்டு கவுன்சிலரும் SDPI நகரத்தலைவருமான  S.நயினாமுஹம்மது (எ) கனி அவர்கள் உடனே தான் முன் வந்து SDPI ஊழியர்களோடு தானும் சேர்ந்து அப்பகுதியை சீரமைத்தார்கள்.

அதனுடைய போட்டாக்கள் சில -


இரண்டாம் கட்ட தேர்தலிலும் வெற்றி இஃவானுக்கே!


imagesCAB96PUV
கெய்ரோ : எகிப்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின் இரண்டாவது கட்டத்  தேர்தலில்  90 சதவீத வாக்குகளை பெற்று இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமான இஃவானுல் முஸ்லிமீன்- எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகிய  பிறகு தேர்தலில் போட்டியிட ஃப்ரீடம் அண்ட ஜஸ்டிஸ் கட்சியை உருவாக்கியது.  எகிப்தின் ஆட்சியை இஃவான்கள் கைப்பற்றுவார்கள் என அரசியல் நோக்கர்கள் கருதினர்.  கணிப்பு

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு


25TH_ELECTION_COMMI_873697f
புதுடெல்லி : உத்தரபிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான  தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புது டெல்லியில் தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஷரீஅத் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி மாலத்தீவில் பேரணி


Maldives-rally-for-islamic-law
மாலி : மாலத்தீவில் இஸ்லாமிய சட்டத்  திட்டங்களை  அமுல்படுத்தக்  கோரியும்,  இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை முடிவுக்கு கொண்டுவரவும் மாலத்தீவின்  தலைநகரான மாலியில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
பல்வேறு முஸ்லிம்  அமைப்புகளும், முக்கிய எதிர்கட்சியான அதாலத் கட்சியும் இணைந்து இந்த  பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

முஸ்லிம்களை கைது செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் உதவியை நாடிய புலனாய்வு ஏஜன்சிகள்


imagesCAO3Q3ZH
 மும்பை : இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்(சிமி) உள்பட இஸ்லாமிய இயக்கங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஏ.டி.எஸ் உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகள் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் புரோகித்தை நாடிய தகவல் வெளியாகியுள்ளது.

துவேசக் கருத்துக்கள்:சமூக இணையதளங்களுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி



Remove derogatory content by February 6, court tells 21 websites ...
புதுடெல்லி : இணையதளங்களில் இருந்து துவேஷ கருத்துக்கள் இடம்  பெற்றிருந்தால் அவற்றை நீக்குவதற்கு ஃபேஸ்புக், கூகிள், யாஹு,  மைக்ரோஸாஃப்ட் உள்பட 21 சமூக  நெட்வர்க்கிங் இணையதளங்களுக்கு டெல்லி  மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட்   பிப்ரவரி 6-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளார்.