நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 19 ஜூன், 2013

அச்சனபுதூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய "பள்ளி செல்வோம்" )SCHOOL CHALO) விழிப்புணர்வு பிரச்சாரம்.



நெல்லை மேற்கு மாவட்டம் அச்சனபுதூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமுக மேம்பாட்டுத்துறையின் சார்பாக "பள்ளி செல்வோம்" (SCHOOL CHALO) "(தேசீய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா) நிகழ்ச்சி ஜூன் 18 அன்று  மாலை 4.30 மணிக்கு அச்சனபுதூர், நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் மாவட்ட தலைவர் A. சிராஜீல் முனிர் அவர்கள், பள்ளிவாசல் இமாம் A. முகம்மது கனி உஸ்மானி மற்றும் SDPI கட்சியின் நகர செயலாளர் மைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரையுடன் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள். இதில் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

செவ்வாய், 18 ஜூன், 2013

“குண்டு வைப்பவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள், பிடிக்கப்படுவது முஸ்லிம்கள் – இதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை!” – வழக்கறிஞர் ஷாஜஹான் மலேசியாவில் உரை

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 16.06.13 ஞாயிறன்று “இஸ்லாத்திற்கெதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

கருத்தரங்கின் ஆரம்பமாக உஸ்தாத் காரீ முஹம்மத் அப்ராருல் ஹக் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் ஜனாப் முஹம்மத் அலீ ஜின்னாஹ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கிற்கு டத்தோ ஜமருல் கான் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்தத் தலைப்பின் அவசியத்தையும், 

சுரண்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம்.



நெல்லை மேற்கு மாவட்டம் சுரண்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுரண்டை பகுதியின் பொறுப்பாளர் பக்ரூத்தீன் அவர்கள் தலைமை ஏற்றார்கள். இதில் 100-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து பயன் அடைந்தனார்...