நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 18 பிப்ரவரி, 2012

போலீஸின் சதித்திட்டத்தை முறியடித்த பாட்லா ஹவுஸ் மக்கள்


புதுடெல்லி : போலி என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் கொலைச் செய்யப்பட்டு பீதி மாறாத பாட்லா ஹவுஸில் நிரபராதிகளான அப்பாவி இளைஞர்களை நள்ளிரவு ஆபரேசன் மூலம் கடத்த முயன்ற டெல்லி போலீசாரின் சதித்திட்டத்தை பொதுமக்கள் முறியடித்து ஜாமிஆ நகர் காவல் நிலையத்தில் போலீசாரை ஒப்படைத்து 25-க்கும் மேற்பட்ட இளைஞர்களை விடுவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸின் சதித்திட்டத்தை முறியடித்த பாட்லா ஹவுஸ் மக்கள்
நள்ளிரவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மாறிய இச்சம்பவத்தில் இருந்து தலை தப்புவதற்காக டெல்லி போலீஸ் தலைமை எட்டு போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எஸ் அதிகாரியை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு – சி.பி.ஐ


புதுடெல்லி : 2008-ஆம் ஆண்டு நடந்த போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் முன்னாள் கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் ஏ.கே.ஜெயினை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.
CBI_Announces_R14368
முதல் முதலாக ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியை பிடிப்பதற்கு பரிசுத் தொகையை சி.பி.ஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை


குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின்  மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.



வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

குஜராத்தில் முஸ்லிம்கள் நிலம் வாங்குவதை தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு


அஹ்மதாபாத் : குஜராத்தில் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்பதை தடுப்பதற்கு சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவுடன் தனியாக ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட இனப் படுகொலைக்கு பிறகு ‘சேதுபந்த் மித்ரா மண்டல்’ என்ற அமைப்பை ஆர்.எஸ்.எஸ் துவக்கியது. ஹிந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்கள் நிலம் வாங்குவதை தடுப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். எவரேனும் முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்க முயன்றால் அதனை முடக்க எந்த வழியிலும் இந்த அமைப்பு முயலும்.

உற்சாகமான தேர்தல் எதிரியின் முகத்தை நோக்கிய இடியாக இருக்கும்: ஈரான் தலைவர்

டெஹ்ரான்: மார்ச் 2- ஆந்தேதி அன்று நடக்கவிருக்கின்ற ஈரான் பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து எதிரியின் முகத்தில் குத்துவார்கள் என்று இஸ்லாமியப் புரட்சியின் மூத்த தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி கூறியுள்ளார்.

தெஹ்ரானிலுள்ள வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில் புதனன்று ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

பிசுபிசுத்துப்போன பா.ஜ.கவின் வாக்குறுதிகள்


வழக்கம் போல் ஒவ்வொரு தேர்தலின் போதும் பா.ஜ.க விடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இந்த முறையும் உத்திர பிரதேச தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.


உத்திர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுவதே பா.ஜ.கவின் லட்சியம் என்று கூறியது. ஆனால் இந்த முறை பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைகள் இந்துக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதும் அவர்கள் பா.ஜ.கவை ஆதரிக்க தயாரக இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதற்கு காரணம் இன்று வாக்களிப்பவர்களில் 60% இளைஞர்களாக இருக்கின்றார்கள். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிலேயே ஆர்வம் காட்டும் அவர்கள் இது போன்று மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை என டாக்டர் முஹம்மது ஆரிஃப் தெரிவித்தார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவி செய்த முஸ்லிம் தொண்டு நிறுவனம்


அஹமதாபாத் :  "நரோடா பாட்டியா" கடந்த 2002 ஆம் ஆண்டு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம். அப்பாவி முஸ்லிம்களில் பெண்கள் குழந்தைகள் என 90ற்கும் மேற்பட்டவர்கள் சங்கப்பரிவாரங்களால் காட்டுமிராண்டித்தனமான‌ முறையில் கொலை செய்யப்பட்டனர். அதே சமயம் இவ்வூரில் தனது அக்கம்பக்கத்தினராக இருந்த இந்துக்களுக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய வீட்டை சீரமைப்பதற்கு முஸ்லிம்களே உதவிசெய்துள்ளனர்.



கடந்த 2003 ஆம் ஆண்டு இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி (ஐ.ஆர்.சி) மூலமாக‌ 70ற்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. அதிக முஸ்லிம்கள் அந்த பகுதியை விட்டு சென்றுவிட்டனர். கலவரத்தின் போது வெளியேறிய பெரும்பாலான இந்துக்கள் மீண்டும் தங்களுடைய இருப்பிடத்திற்கு வந்துவிட்டனர்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கிறதாம்!

சென்னை :  1 6.02.2012 அன்று காலை "டைம்ஸ் நவ்" ஆங்கில செய்தி சேனலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய பயங்கரமான செய்தியை வெளியிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி அளிக்கிறதாம்! பயிற்ச்சி என்னவென்றால்? காவல்துறையினரும், உளவுத்துறை அதிகாரிகளும் கேள்வி கேட்டால் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பயிற்ச்சி அளிப்பதாக டைம்ஸ் நவ் சேனலில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்பு என்றும், தீவிரவாத அமைப்பு என்றும் உளவுத்துறையினரால் தீவிரமாக கண்காணித்து வரப்படுகின்ற இயக்கம் என்று வழக்கம் போல் அறைத்த மாவையே அறைத்தது. அது சரி! உளவுத்துறை அதிகாரிகள் அதே மாவை கொடுத்து அறையுங்கள் என்று  கூறும்போது இந்த ஊடகங்களை குற்றம் சுமத்தி என்ன பிரயோஜனம்?


எஸ்.டி.பி.ஐ பேரணியில் போலீஸ் அராஜகம் – தடியடி, கைது


திருவனந்தபுரம் : சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்திய தேசத்துரோக வழக்கை வாபஸ்பெறக் கோரி எஸ்.டி.பி.ஐ நடத்திய தலைமைச் செயலகத்தை நோக்கிய பேரணியில் போலீஸ் அராஜகம்.
sdpi march police lathicharg​e
எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தடியடியில் ஏராளமான உறுப்கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் இருந்து பேரணி துவங்கியது. துவக்க உரைக்கு பின்னர் சிறிய அளவில் போலீசாருக்கும், எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் இடையே தள்ளு. முள்ளு நிகழ்ந்தது. இதனைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாத சூழலில் போலீசார் திடீரென தடியடி நடத்த துவங்கினர். 

குஜராத் அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அஹமதாபாத்: கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற கலவரத்தில் எரிக்கப்பட்ட 56 முஸ்லிம் கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்காதது தொடர்பாக குஜராத் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


 2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் அஹமதாபாத்தில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். 

முஸ்லிம்கள் மீண்டும் தங்களது விசுவாசத்தை காண்பிக்க வேண்டும் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்


லக்னோ:  ஆர்.எஸ்.எஸ்-ன் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் முஸ்லிம்கள் இந்திய தேசத்தின் மீதான தங்களது விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை இமாம்பாரா என்னும் இடத்தில் சில முஸ்லிம் மொளலவிகள் நடத்திய் மீலாது விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.

முஹம்மது நபியும் ஒருவர் தன்னுடைய தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார். தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருக்க வேண்டிய தனித்துவமிக்க அம்சமாகும். எல்லா முஸ்லிம்களும் தங்களது நபி கூறியபடி நடப்பார்கள் என்று நம்புகிறேன் இவ்வாறு மொபைல் போனின் மூலம் பேசியுள்ளார்.