நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 17 மார்ச், 2012

மங்களூரில் பா.ஜ.க அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்


மங்களூர் : கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மங்களூரில் கடந்த 14ஆம் தேதி அன்று துணை ஆணையர் அலுவலகத்திற்கு அருகே ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க அரசு வர்ணாசிரமக்கொள்கையான ஜாதி முறையை இந்துத்துவாவினரின் தூண்டுதலோடு கல்வி முறையில் புகுத்த முற்பட்டுள்ளது.
Mangalore Campus

பி.யு தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப படிவத்தில் ஜாதியை குறிப்பிடும்படி நிர்பந்தித்துள்ளது பா.ஜ.க அரசு. இதனை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மாவட்ட தலைவர் ஹைதர் ஹபீப் "மதச்சாற்பற்று, மக்களாட்சி கொள்கையின் படி நடக்க வேண்டிய பா.ஜ.க அரசு கல்வித்துறையில் ஜாதி முறையை புகுத்த முயற்சி எடுத்து வருகிறது, இப்படி செயல்படுத்துவதினால் மக்களின் வாழ்க்கை தரம் கீழ் நோக்கி செல்லுமே தவிர முன்னேற்றம் அடையமுடியாது."

வெள்ளி, 16 மார்ச், 2012

அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்

மும்பை: ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய 27 அடுக்கு கொண்ட ஆடம்பர கனவு இல்லம் கட்ட வக்ப் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மகாராஷ்டிரா அரசு தடுமாற்றத்தில் உள்ளது.


முகேஷ் அம்பானி வக்ப் நிலத்தை ருபாய் 20 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு இப்பிரச்சனை தொடர்பாக மாநில அரசுக்கு வரைந்துள்ள கடிதத்தில் நில விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுக் குழுவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சிபிஐ விசாரணை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான கோரத்தாண்டவங்கள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்


வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.
சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா வின் சமுக மேம்பாட்டு துறை ... பிப்ரவரி 2012

ஒரு தொகுப்பு ...

பாடபுத்தகங்கள் காவிமயமாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்


பெங்களூர்: கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றது. மாநில தலைவர் முஹம்மது இலியாஸ் தும்பே இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

காவிமயமாகி வரும் பாடபுத்தகங்கள்:

5 மற்றும் 8ஆம் வகுப்புக்களின் சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் காவிமயமாக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் மனதில் இனவாதத்தை தூண்டும் அளவிற்கு பாடங்கள் இயற்றப்பட்டுள்ளன. 


மணிப்பூரில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் சார்பாக "பள்ளி செல்வோம்" விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தின் போது கல்வி பற்றியை விழிப்புணர்வை பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 

school chalo Manipur
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் "பள்ளி செல்வோம்" என்ற தலைப்பில் கல்விக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 13ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் "காக்சிங் சோரா" ஆரம்பப்பள்ளியில் பள்ளி செல்வோம் பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் முஃப்தி அர்ஷத் ஹுஸைன் தலைமை தாங்கி நடத்தி தந்தார். சமூக சேவகர் முஹம்மது அப்துர்ரஹ்மான், ஹாஜி அப்துல் குத்தூஸ் ஹாஜி சிராஜ் அஹமது போன்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் – முக்கிய அம்சங்கள்


டெல்லி : 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். காங்கிரஸின் சரிந்து கிடந்த ஓட்டு வங்கியை சரிசெய்யும் முயற்சியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
Budget 2012 - India
விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்
விவசாயத்துறையைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளுக்கு உதவும் நபார்ட் வங்கிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு.
விவசாய கடன்களுக்கான வட்டி தளர்த்தப்படும்.

ஈரான் உறவை தொடர்ந்தால் இந்தியா மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா – பின்னணியில் இஸ்ரேல்!


நியூயார்க் : இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதாரத் தடை
கச்சா எண்ணெய் இறக்குமதியை ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து  மேற்கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பான முடிவுகள் வரும் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படும் என்று அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழன், 15 மார்ச், 2012

ஒளரங்கசீப்


சக்ரவர்த்தி என்கிற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் ஒளரங்கசீப் தான். 
ஆனால் சரித்திரப் பாடநூல்கள் ஒளரங்கசிப்பை மிகத் தவறாகவே அறிமுகப்படுத்துகின்றன. உண்மையில் ஒளரங்கசீப் எப்படிப்பட்டவர்? அவருடைய ஆட்சி எப்படி இருந்தது? வியப்பூட்டும் உண்மைத் தகவல்களைப் படியுங்கள்.

அமீர் சுல்தான் விடுதலை! எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் உற்சாகம்


சென்னை: எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் 4 மாத சிறைவாசத்திற்கு பிறகு இன்று காலை சரியாக 8:30 மணியளவில் புழல் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றார். நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்களின் பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பு மூலமாக துறைமுகம் வந்தார்.


எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக செயல்பட்டு வந்த அமீர் சுல்தான் கடந்த வருடம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக பொய் வழக்கு புணையப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இரு நாட்கள் பிறகு அவரை குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைத்தனர். 

சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆதரவு!

தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் காலை 10:30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் நீதிமன்றம் முன்பு சாலை மரியலிலும் ஈடுபட்டனர்.


புதன், 14 மார்ச், 2012

Gmail Drive கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கென்று ஒரு இலவச Hard Disk உங்கள் கணனியிலே..


இணைய உலகில் ஓன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த தொடர்பாடல் ஊடகமாக காணப்படும் ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக (hard disk) பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25GB வரை அதிகரிக்க முடியும்.
இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது. இதனைப் பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை மூலம் தகவல்களை சேமிக்க முடியும்.

இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்ட்ரோய்ட் தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கு.. ஆட்டோமாட்டிக்காக Silent Mode இற்கு மாற்றும் இலவச ஆப்ளிகேசன்


தொலைபேசிகளை எல்லோரும் இரவு வேளைகளில், எம்மை தொந்தரவு செய்யாதிருக்கும்பொருட்டு Silent Mode இல் வைத்திருப்போம் அல்லவா?
இதற்கு தினமும் இரவு வேளைகளில் Manual ஆக Silent Mode இற்கு மாற்றி வைப்போம்.
ஆனால் Android தொலைபேசிகளில் Automatic ஆக தினமும் இரவுவேளையில் Silent Mode இற்கு மாறிக்கொள்ளும் வகையில் Application ஒன்று வெளிவந்துள்ளது.

வியப்பைத் தரும் விண்டோஸ் 8. மைக்ரோசொப்ட் தரும் ஆச்சரியமான தகவல்கள்.


மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது.



வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனைப் பெற விரும்புபவர்கள்  http://windows.microsoft.com/ enUS/windows8/download   என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

பலிகடா ஆக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள் குறித்த குறும்படங்கள் வெளியீடு


ஹைதராபாத் : ஹைதராபாத்தைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றின் சார்பாக கடந்த திங்கள் அன்று மஹபூப் ஹுசைன் ஜிகர் அரங்கில் முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு இந்தியாவில் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.
பலிகடா ஆக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள்
‘ஆஃப்டர் தி ஸ்ட்ரோம்’ (After the Storm) மற்றும் ‘அவுட் ஆஃப் கோர்ட் செட்டல்மென்ட்’ (Out of Court Settlement ) ஆகிய இக்குறும்படங்களே திரையிடப்பட்டது.

அமீர் சுல்தான் மீது போடப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு!

சென்னை: எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் மீது அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட பொய்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உடைபட்டது. ஓரிரு நாட்களில் இறைவன் அருளால் அமீர் சுல்தான் அவர்கள் விடுதலை அடைவார் என எஸ்.டி.பி.ஐயின் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் தெரிவித்தார்.


எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக பொறுப்புவகித்து வந்தவர் அமீர் சுல்தான். துறைமுகம் தொகுதியில் பல சமூக நலப்பணிகளை மேற்கொண்டுவந்ததால் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் ஆதரவை நன்மதிப்பையும் பெற்றிருந்தார். இவர் ஆற்றிய சேவைகளால் எஸ்.டி.பி.ஐ கட்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்தனர். எம்.எல்.ஏவாக, கவுன்சிலராக இருந்து செய்ய வேண்டிய பணிகளை எந்த ஒரு அரசாங்க பொறுப்பு வகிக்காமலும், சுயநலமில்லாமலும் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வந்ததால் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அமீர் சுல்தான் மேல் பொறாமையும், காழ்புணர்ச்சியும் ஏற்பட்டது.


ரெயில்வே பட்ஜெட் தாக்கல்:பாதுகாப்பிற்கு முன்னுரிமை – அனைத்து வகுப்புக் கட்டணமும் உயர்வு!


புதுடெல்லி : தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள ரெயில்வே அமைச்சர் திரிவேதி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அனைத்து வகுப்பு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2 பைஸா முதல் 30 பைஸா வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Railway Budget 2012
கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக ரெயில்வே டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து இம்முறை ரெயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா:ஆதாரங்களை சேகரிக்க என்.ஐ.ஏ குழு இந்தூரில்!


இந்தூர் : 68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் தலைவர் கமல்சவுகானை குண்டுவெடிப்புடன் தொடர்பு படுத்தும் ஆதாரங்களை சேகரிக்க தேசிய புலனாய்வு குழு(என்.ஐ.ஏ) இந்தூர் சென்றுள்ளது.
samjhauta-blast-accused1_f
கூடுதல் சூப்பிரண்ட் உள்பட எட்டு உறுப்பினர்களை கொண்ட குழுவினர் ஆதாரங்களை சேகரிக்க அங்கு சென்றுள்ளனர். சவுகான் வெடிக்குண்டை தயாரித்து பெட்டிகளில் வைத்து டெல்லிக்கு கொண்டு சென்றதற்கான ஆதாரங்களை சேகரிப்பதுதான் என்.ஐ.ஏவின் நோக்கமாகும். 

முக்கிய எதிரி இஸ்ரேல் – எகிப்து பாராளுமன்றத்தில் தீர்மானம்!


கெய்ரோ : இஸ்ரேல் முதல் எதிரி என்று அறிவிக்கும் தீர்மானம் எகிப்து பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
EGYPT POLITICS PARLIAMENT
இஸ்ரேல் தூதரை நாட்டைவிட்டு வெளியேற்றவும், இஸ்ரேலுக்கான எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தவும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் அவையில் அரபு விவகார கவுன்சில் இத்தீர்மானத்தை தயாரித்தது. பாராளுமன்ற எம்.பிக்கள் ஒரு மனதாக இத்தீர்மானத்தை ஆதரித்தனர்.

செவ்வாய், 13 மார்ச், 2012

வெளிமாநில மாணவர்களின் உரிமைகளை பறிக்க கூடாது! தமிழக உள்துறை செயலாளருக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை

சென்னை :-  சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி வட மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் போலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படித்து வரும் வெளிமாநில மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களை மாநகர காவல்துரையினர் சேகரித்து வருகின்றனர்.

பீகார்-கோபல்கஞ்ச்:ஹோலி பண்டிகை ஊர்வலத்தால் மோதல்-பதட்டம்


கோபல்கஞ்ச்:பீகார் மாநிலம் கோபல்கஞ்ச் திர்பிர்வா பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
gopalganj tension
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முஸ்லிம்கள் தங்களது ஜும்மா தொழுகையை தொழுது கொண்டிருந்த போது, அவ்வாழியாக வந்த ஹோலி பண்டிகை ஊர்வலத்தினர் களியாட்டம் ஆடி பாடல்கள் பாடிக்கொண்டு வரவே, அவ்வாறு பாடல்கள் பாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆகையால் அந்த கும்பல் கற்களைக் கொண்டு எறிந்து மோதலில் ஈடுபட்டது. அதில் 12 பேர் காயமடைந்தனர்.

‘யே முல்க் ஹமாரா நஹீ ஹை’ – உணர்ச்சி வசப்பட்ட ஷப்னம் ஹாஷ்மி!


புதுடெல்லி : ’யே முல்க் ஹமாரா நஹீ ஹை’ (இந்த தேசம் எங்களுடையது அல்ல)- இதனை கூறி தனது உரையை முடிக்கும் வேளையில் உணர்ச்சி வசப்பட்ட சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்தார்.
shabnam hashmi
இஸ்ரேல் கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான மூத்த பத்திரைகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மிக்கு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக சமூக ஆர்வர்லளுடன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய ஷப்னம் ஹாஷ்மி, நாங்களும் இணைந்து பணியாற்றியதன் மூலம் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடமிருந்து உருவான பயங்கர அனுபவங்களை குறித்து விவரிக்கும் பொழுது கண்ணீர் வடித்தார்.

கஸ்மிக்கு ஆதரவாக இந்தியா கேட்டில் போராட்டம்


புதுடெல்லி: இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதான பிரபல பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மது கஸ்மிக்கு நீதி கோரி டெல்லி இந்தியா கேட்டில் மெழுகு திரி ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
The crowd at India gate
கஸ்மியின் குடும்பத்தினருடைய அழைப்பை ஏற்று நண்பர்களும், சமூக ஆர்வலர்களும் அடங்கிய நூற்றுக்கணக்கானோர் இந்தியா கேட்டில் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர். மாலை ஏழு மணிக்கு துவங்கிய போராட்டம் ஒன்றரை மணிநேரம் நீடித்தது.

திங்கள், 12 மார்ச், 2012

இஸ்ரேலின் தூண்டுதலால்தான் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளார் - பாப்புலர் ஃப்ரண்ட்

புதுடெல்லி:  மூத்த பத்திரிக்கையாளரான செய்யது முஹம்மது காஜ்மி கைதுசெய்யப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூண்டுதலினால் தான் இந்திய அரசு காஜ்மியை கைது செய்துள்ளது என்பதற்கான வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சல நாட்களுக்கு முன்பு டெல்லியில் இஸ்ரேலிய தூதரின் காரில் குண்டுவெடித்தது. இதற்கு ஈரான் தான் காரணம் என எந்த ஆதாரமுமில்லாமல் இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டின. இஸ்ரேலிய உளவுத்துறையினர் கொடுத்த செய்தியின் அடிப்படையில் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த அரசு கூறுகிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். 

ம.தி.மு.க-வேட்பாளர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை துவக்கியுள்ளது


சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களித்து அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று தீவிரமாக மக்களிடத்தில் வேட்பாளருடன் சேர்ந்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர்,மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் SDPI-ன் தொண்டர்களுடன் ஓட்டு சேகரித்த காட்சி இதோ..........


படித்துவிட்டீர்களா..!! இந்த மாத விடியல் வெள்ளி இதழை...

கவர் ஸ்டோரி - டெல்லி குண்டு வெடிப்பு இஸ்ரேலின் சதியா ?
துணை கவர் ஸ்டோரி - குஜராத் இனப்படுகொலை 10 ஆண்டுகளுக்கு பின்....
தலையங்கம் - அபாயகரமான அறிகுறிகள்?!

உள்ளே - சங்கரன் கோவில் கலவரம் - 4-ம் பக்கம்
                    காலமே வாழ்க்கை - 10-ம் பக்கம்
                    கஷ்மீரில் கடந்த ஆண்டு என்ன நடந்தது?- 18 -ம் பக்கம்
                    மீடியாவும் முஸ்லீம்களும்.... - 31-ம் பக்கம்
                    காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! - 49-ம் பக்கம்
                    மாணவர்கள் வன்முறையாளர்களாக... - 50-ம் பக்கம்
                    ஈரான் உலக அமைதிக்கு அச்சுறுத்தலா?! - 52-ம் பக்கம்
                    பா.ஜ.க-வின் தொடரும் காம லீலைகள் - 58-ம் பக்கம்
                    மனதோடு மனதாய் - 64-ம் பக்கம்


மறக்காமல் விடியல் வெள்ளி மாத இதழை வாங்கி படியுங்கள்....

ஞாயிறு, 11 மார்ச், 2012

N.W.F சார்பாக மகளிர் தின நிகழ்ச்சிகள்

தமிழகத்தில் பல இடங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணிகள், கருத்தரங்கங்கள் நடைபெற்றது.
இராமநாதபுரம்

2014-ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமம்- ஆர்.எஸ்.எஸ்


புதுடெல்லி : 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
RSS slams BJP for UP debacle
ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.