நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 19 மே, 2012

மத்திய அரசுக்கு முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க அச்சம்!-ஹர்ஷ் மந்தர் சாடல்!


புதுடெல்லி:சிறுபான்மை மக்கள் வாழும் மாவட்டங்களை மையமாக கொண்டு மத்திய அரசு தயாராக்கிய சிறப்பு திட்டம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர் மத்திய அரசை சாடியுள்ளார்.
harshmander
முஸ்லிம்களின் நிலைமையை மாற்ற உண்மையிலேயே மத்திய அரசு விரும்புமானால் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் மறுதலிக்கும் போக்கை கைவிடவேண்டும் என்று ஹர்ஷ் மந்தர் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 17 மே, 2012

கத்தரில் தேஜஸ் நாளிதழின் பதிப்பு துவக்கம்!


தோஹா:உலக நாடுகளில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் கத்தரின் காலைப் பொழுதை அலங்கரிக்க மலையாள நாளிதழான தேஜஸ் தனது பதிப்பை துவக்கியுள்ளது. மலையாளிகளின் பத்திரிகை வாசிப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த தேஜஸ் வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடுவதன் வெளிப்பாடே கத்தரின் புதிய பதிப்பு உணர்த்துகிறது.
thejas
கத்தரின் அரசு பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கல்ஃப் தேஜஸின் நான்காவது பதிப்பின் வெளியீடு துவக்கப்பட்டது.

புதன், 16 மே, 2012

கீரைகளின் மருத்துவ பண்புகள்


அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள். நமது உடல் நலத்தை பேணிக்காப்பதில் தானியவகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில்கீரைகள் மிகச்சிறந்த இடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்புச்சத்தும் மிகக்குறைந்தஇடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்பும் மிகக்குறைந்த அளவிலும், உடலுக்குத்தேவையான நோய் எதிர்ப்புச் சத்தியை அளிக்கவல்ல வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிகஅளவில் இருக்கின்றன. சீரண மண்டலம் சீராகச் செயல்படுவதற்குத் தேவையான நார்ச்சத்து கீரைவகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.

பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - ஏப்ரல் மாத ரிப்போர்ட்

               பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - ஏப்ரல் மாத ரிப்போர்ட்

  1.    கடையநல்லூரில் ஏழை குடும்பத்திற்கு ரூ.5000/- மதிப்புள்ள தையல்   மிஷின் வழங்கப்பட்டது.
  2.        கடையநல்லூரில் விபத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை ஒருவருக்கு  மருத்துவ உதவியாக ரூ.5000/- வழங்கப்பட்டது.   
  3.        கடையநல்லூரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஏழை முதியவர்    ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ.2000/-  வழங்கப்பட்டது.
  4.    கடையநல்லூரில் ஏழை பெண்ணின் திருமணத்திற்காக‌ ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.
  5.  5.  கடையநல்லூரில் 2 ஏழை சிறுவர்களுக்கு கத்னா செய்வதற்காக    ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.
  •       
  •       பல்வேறு சிகிச்சைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள்  ஏப்ரல்  மாதத்தில் மட்டும் 35 யூனிட்க்கு மேலாக இரத்த தானம் செய்துள்ளார்கள்.

செவ்வாய், 15 மே, 2012

அவதூறுச் செய்தி:13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது ப்ரஸ் கவுன்சிலில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார்!


டெல்லி:பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய  13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் செய்துள்ளது.
press council of india
இதுகுறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
“சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின்பும் முறையான பதிலை தராத காரணத்தால் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்கு முறை ஆணையத்தை பாப்புலர் ஃபிரண்ட் அணுக நேர்ந்தது.

கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத்:கண்ணைக் கட்டுதே – திணரும் பா.ஜ.க மேலிடம்!


புதுடெல்லி:அடுத்தடுத்து ஒவ்வொரு மாநில பிரிவுகளிலும் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதில் பா.ஜ.க மேலிடத்திற்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டதாம்.
திணரும் பா.ஜ.க மேலிடம்
கர்நாடகாவில் எடியூரப்பாவும், ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியாவும் தம் வசம் வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களை காட்டி பா.ஜ.க மேலிடத்தை மிரட்டி வரும் வேளையில், குஜராத்தில் முன்னாள் முதல்வரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கேசுபாய் பட்டேல் மோடி எதிர்ப்பை கிளறிவிட்டு கட்சிக்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறார்.