நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 ஆகஸ்ட், 2013

எகிப்து ஆதரவு தினத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மனிதச் சங்கிலி போராட்டம்!




 ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் எகிப்திய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி ஜந்தர் மந்தரில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தியது. மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று(30/08/2013) மாலை 3 மணியளவில் ஜந்தர் மந்தரில் எகிப்திய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாநாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது.



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில்:

ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியை அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கவிழ்த்துள்ளன. மக்களிடம் அதிகாரம் செல்வதை கண்டு அஞ்சுபவர்கள், இந்த ராணுவ புரட்சிக்கு துணை நின்றனர். அதிகாரம் மக்களிடம் சென்றால், எகிப்தின் வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்காவின் திட்டம் தவிடுபொடியாகும். இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா, இந்த ராணுவ நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும். எகிப்தில் மீண்டும் முர்ஸியை பதவியில் அமர்த்துவதற்கும், ஜனநாயகம் மீண்டும் எகிப்தில் மலரவு இந்தியா ராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் தனது உரையில் கூறினார்.

கவ்மி ஸலாமத்தி பத்திரிகையின் முதன்மை எடிட்டர் முஹம்மது அஹ்மத் காஸ்மி தனது உரையில் கூறியது:

எகிப்தில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் தியாகம் வீண் போகாது. பாதிக்கப்பட்ட மக்களுடன் சேராத நடுநிலையை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் என்றார் அவர்.

லோக் ராஜ் என்ற அமைப்பின் பிரதிநிதி பிர்ஜு நாயிக் தனது உரையில் கூறியது:

அமெரிக்காவை ஆதரிப்பவர்கள் ஜனநாயகவாதிகளாகவும், சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகளாகவும் முத்திரைக்குத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணை தலைவர் பேராசிரியர் பி.கோயா தனது உரையில் கூறியது:

செயல் அளவில் மிகவும் வலிமையாக மாறி வரும் முர்ஸியின் அரசை ஒழிப்பது இஸ்ரேலுக்கு தேவை. எகிப்தில் நடந்தது போல ஜனநாயக புரட்சி தங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என்று இதர அரபு நாடுகள் அஞ்சுகின்றன என்றார் கோயா.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தேசிய தலைவர் உஸ்மான் பேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம், எஸ்.டி.பி.ஐயின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் இனாமுர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர்.

தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகம் ஆடிய பா.ஜ.க பிரமுகர்கள் கைது!


திண்டுக்கல்லில் பா.ஜனதா கட்சியின் கிளை தலைவர் பிரவீன்குமார் வீட்டில் சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நாடகம் என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் அவரும் அவரது நண்பரும் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் குமாரும் அவரது நண்பர் கமலக்கண்ணனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுக்குறித்து போலீஸார் தெரிவிக்கையில்; ‘திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பா.ஜ., கிளை தலைவராக பிரவீன்குமார் செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தனது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக, போலீசில் புகார் செய்தார்.
பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, பிரவீன்குமார் நண்பர் கமலக்கண்ணனிடம் விசாரித்தோம். அவரும், பிரவீன்குமாரும் சம்பவத்தன்று மது குடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, பிரவீன் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். பின்பு ஒன்றும் தெரியாதவர்கள் போல நாடகமாடி, போலீசாருக்கு பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார்.
தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும், கட்சியில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக, அவர் நாடகமாடியுள்ளார். இவர்களது மொபைல் போன் பேச்சுகளை வைத்து, இதை கண்டுபிடித்தோம்.’ என்றார்.
கடந்த மாதம் இதேப்போன்று கோவையில் போலீஸ் பாதுகாப்புக்காக அனுமன் சேனா தலைவர் கடத்தல் நாடகமாடி கைதான நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அதே திண்டுக்கல் நகரில் தமுமுக கிளைத் தலைவர் ஒருவர் வீட்டின் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மாலேகான்: ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் விடுவிக்கப்படுகின்றார்கள்!




மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.


மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006 செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நூருல் ஹுதா சம்சுதா (28), ஷப்பிர் அகமது மஸியுல்லா (41), ரயீஸ் அஹ்மது ரஜாப் அலி மன்சூரி (35), டாக்டர் ஸல்மான் பார்சி அப்துல் லத்தீப் அய்மி (40), டாக்டர் பரோக் இக்பால் அஹ்மது மக்துமி (38), முஹம்மது அலி ஆலம் ஷேக் (42), ஜுனைத் (35), முஹம்மது ஜாகித் அப்துல் மஜீத் அன்சாரி (31), அப்ரர் அஹ்மது குலாம் அஹ்மது (38) ஆகியோரை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். அதன் பிறகு இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இவர்கள் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு செய்தனர். இதை ஏற்ற நீதிமன்றம் 9 பேரையும் ஜாமீனில் விடுவித்தது. அதன் பின், 9 பேரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேசிய புலனாய்வு அமைப்புக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீதான தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு வந்தபோது மாலேகான் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக லோகேஷ் சர்மா, தனசிங், மனோகர் சிங், மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாலேகானில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.