நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 மார்ச், 2012

ஃபஸல் கொலைவழக்கு:வழக்கை சீர்குலைக்க க்ரைம் ப்ராஞ்ச் முயற்சி – சி.பி.ஐ


கண்ணூர் : கேரள மாநிலம் தலசேரியில் தேசிய ஜனநாயக முன்னணியின்(என்.டி.எஃப்) உறுப்பினர் பி.கே.முஹம்மது ஃபஸலை வெட்டிக் கொலைச் செய்த வழக்கில் விசாரணையை சீர்குலைக்க போலீசும், க்ரைம் ப்ராஞ்சும் முயன்றதாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
Fasal-270x170 
இடதுசாரி கூட்டணி ஆட்சியில் நடந்த இந்த அநியாய படுகொலையில் குற்றவாளிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குண்டர்களை பாதுகாக்க அரசு மட்டத்தில் முயற்சிகள் நடந்துள்ளது என்பது சி.பி.ஐக்கு தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் முக்கிய சம்பவங்கள் நடந்தபொழுது அன்றைய உள்துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏவுமான கொடியேறி பாலகிருஷ்ணன் தலச்சேரியில் தங்கியிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

மக்கா ஹரம் ஷரீஃபின் முற்றங்களில் சூடேறாத மார்பிள்கள்!


ஜித்தா : மஸ்ஜிதுல் ஹரமின் முற்றங்களில் புதிய மார்பிள்களை பதிக்கும் பணி துவங்கியுள்ளது. புனித பயணிகளுக்கு கூடுதல் ஆறுதலை அளிக்கும் விதமாக கோடை காலங்களில் சூட்டை தணித்து, சூரிய ஒளியை தடுக்கும் சக்தி வாய்ந்த மார்பிள்கள் பதிக்கப்படுகின்றன. கஃபாவை தவாப்(சுற்றுதல்) செய்யும் பகுதிகளில் பதித்துள்ளது போன்ற மார்பிள்கள் முற்றங்களிலும் பதிக்கவேண்டும் என்ற உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது.
மக்கா ஹரம் ஷரீஃபின் முற்றங்களில் சூடேறாத மார்பிள்கள் 
கஃபாவின் மேற்கு பகுதிகளில் உள்ள முற்றங்களில் புதிய மார்பிள்களை பதிக்கும் பணி துவங்கியுள்ளது. இதர பகுதிகளிலும் பழைய மார்பிள்களை அகற்றிவிட்டு புதிய மார்பிள்கள் பதிக்கப்படும். என்ஜீனியர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய மார்பிள்களுக்கு பதிலாக புதிய மார்பிள்களை பதிக்கும்போது ஹரம் ஷரீஃபின் முற்றங்களில் இனி புனித பயணிகளுக்கு சூடு பற்றி கவலை இல்லாமல் அமரலாம்.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமை கவுன்சிலில் தீர்மானம்!


வியன்னா: ஃபலஸ்தீன் பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு மையங்களை குறித்து விசாரணை நடத்தக்கோரும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது.
UN rights body launches probe into Israeli settlements 
இஸ்ரேல் குடியிருப்புகளை கண்டித்து முதன்முதலாக ஒரு ஐ.நா ஏஜன்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 23 மார்ச், 2012

வக்ஃப் வாரியத் தலைவரை உடனே நியமனம் செய்ய வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு தீர்மானம்!

மதுரை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 21,22.03.2012 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.ஸ்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு
 
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது , துணைத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் , பொருளாளர் கே.எஸ்.எம்.இப்ராஹிம் என்ற அஸ்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். செயற்குழுவில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருமண உதவி

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக சென்னை துறைமுகம் தொகுதியிலிருந்து ஏழை பெண்ணின் திருமண உதவியாக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது. இதனை மணமகளின் சகோதரர் பாப்புலர் ஃப்ரண்டின் துறைமுகம் சகோதரர் அப்துர்ரஹ்மான் மற்றும் தலைமை அலுவலகத்தின் நிர்வாகி சகோதரர்  அஸ்கர் ஆகியோர் வழங்கினர்.



உதவி பெற்றவர் : ஜஸாவுதீன்
மணமகள் பெயர் : ஜம்ஷீத் ரிஃபாயா பானு
ஊர்: அரசூர் பூச்சிக்காடு (தூத்துக்குடி மாவட்டம்)
உதவித்தொகை: ரூபாய் 3000/- 

கூடங்குளம்​:போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற வைகோ, நெல்லை முபா​ரக், சீமான், கொளத்தூர் மணி கைது!


திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க செல்ல முயன்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பு தலைவர் சீமான் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக பாளையங்கோட்டையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக, எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரண்ட்  உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றினர்.

ஜும்மா உரை நிகழ்த்தும் இமாம்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மும்பை: எந்த ஒரு சமுதாயத்திற்கும் வாய்த்திறாத சிறப்பான ஒரு தருணம் தான் முஸ்லிம்களுக்காக இறைவன் வழங்கியிருக்கின்ற ஜும்மா தருணம். இந்த ஜும்மா நாட்களில் 90% மேற்பட்ட முஸ்லிம்கள் நிச்சயமாக இறைவனின் வீட்டிற்காக தொழுகைக்குச்செல்வார்கள். அச்சமயத்தை இமாம்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டு சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அலீமீ மூவ்மெண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.


கடந்த 18ஆம் ஆண்டு பைக்குல்லா (மும்பை) என்ற இடத்தில் உள்ள மஸ்ஜிதே மோட்டி என்ற பள்ளிவாசலில் ஆலிமீ மூவ்மெண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இமாம்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பெரும்பாலான இமாம்களுக்கும் உலமாக்களுக்கும் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நிலவி பிரச்சனைகள் பற்றிய விரிவான் பார்வை இல்லாமல் இருக்கின்றது.

ஃபஜல் கொலை வழக்கு - சிபிஐ முன் ஆஜராகாத சிபிஐஎம் தலைவர்


கன்னூர்: தளசேரியில் முஹம்மது ஃபஜல் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சி.பி.ஐ.எம்-ன் தலைவர் சந்திரசேகரன் சிபிஐ அதிகாரிகளுக்கு முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்றத்தின் ஆணையை பொருட்படுத்தாமல் அவமதித்துள்ளார்.
 
சி.பி.ஐ.எம்-ன் திருவங்காடு செயலாளராக இருப்பவர் சந்திரசேகரன், முஹம்மது ஃபஜல் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் முன் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்பது நீதிமன்றத்தின் ஆணை. இது தொடர்பாக சந்திரசேகருனுக்கு ஐந்து நாட்கள் முன்பாகவே சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இக்கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ அதிகாரிகள் சந்திரசேகரனை விசாரித்திருக்கின்றனர்.

தமிழர்களுக்கு ஆறுதல் அளித்த "ஐ.நா" குஜராத்தையும் திரும்பி பாரு "நைனா"

இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் இந்தியா ஆதரவுடன் வென்றது.


குஜராத் மாநிலத்தில், முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன படுகொலை நடந்து முடிந்து, 10 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு, உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு மனித உரிமை இயக்கங்களும் குரல் கொடுத்தும் பயனில்லை. 

வியாழன், 22 மார்ச், 2012

யூத பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்


புதுடெல்லி : யூத பயங்கரவாத சக்திகள் நமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு அமைதியை சீர்குழைத்து வரவதோடு நாட்டில் பல தீவிரவாத தாக்குதல்களுக்கும் காரணமாய் விளங்கிவருகிறது. யூத பயங்கரவாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் வீரியத்துடன் பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் தீர்மானித்துள்ளது.
 
தேசிய தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடைபெறவிருக்கும் இப்பிரச்சாரத்தின் அங்கமாக மத்திய அரசு இஸ்ரேலுடனான தனது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்த இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

குமரியில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடங்க இருக்கும் ஆம்புலன்ஸ் சேவை

கன்னியாகுமரி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய பல சேவைகள் செய்து வரப்படுகிறது. பல ஆண்டுகாலமாக இத்தகைய சேவைகள் செய்யப்பட்டு வந்தாலும் கடந்த இரு மாதங்களாக அதனை ஒழுங்குபடுத்தி அச்சேவைகளை சமுதாய மக்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கான ரிப்போர்டையும் சமர்பித்து வருவது தாங்கள் அறிந்த ஒன்றே.
அவசர உதவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்படுத்தியிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

புதன், 21 மார்ச், 2012

குஜராத்தை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இந்துத்துவ பரிசோதனை !!!!

ஆபத்து நிறைந்த பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மதத் தீவிரவாதப் பாதையில் கருநாடக மாநிலம் சென்று கொண்டி ருக்கிறது என்பதை அங்கு நிகழும் பல்வேறு நிகழ்வுகள் காட்டுவதாக ராணா அயூப் என்பவர் தெஹல்கா வார இதழில் ஹிந்துத்வாவின் இரண்டாவது பரிசோதனைச் சாலை என்ற தலைப்பில் எழுதியுள்ள தனது கட்டுரையில் தெரி வித்துள்ளார்.

 
குஜராத்துக்கு அடுத்தபடியாக தங்களின் இந்துத்துவா பரிசோதனையை நடத்த பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கருநாடக மாநிலத்தைத் தேர்வு செய்திருப்பதாகவே தெரிகிறது.
 இந்துக்களின் சங்கமமாம்!

கூடங்குளத்தில் ஜெயா அரசின் பாசிச அடக்குமுறை!


திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடிய மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த தமிழக அரசு அடக்குமுறையை ஏவியுள்ளது.
Thousands of Koodankulam protesters gathered in front of St Lourdes church 
11 அணு மின் உலை எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலில் தமிழக அரசின் அராஜகத்தை எதிர்த்து போராடிய கூட்டப்புளி கிராம மக்கள் 178 பேரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளது. இதில் 45 பேர் பெண்கள். 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாளை மத்திய சிறை அருகே இருக்கும் நிலையில் தொலைதூர சிறைகளில் அடைத்து மக்களின் வாழ்க்கையை அலைக்கழிக்கும் தமிழக ஜெயா அரசின் திட்டமே இதன் பின்னணியில் அமைந்துள்ளது.

செவ்வாய், 20 மார்ச், 2012

கூடன்குளம் - அமைச்சரவை தீர்மானம் ஏமாற்றத்திற்குரியது அரசு வாபஸ் பெற வேண்டும்


கூடன்குளம் அணு உலை போராட்டம் என்பது இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் ல் நடைபெற்ற புகுஷிமா அணு உலை வெடிப்பிற்கு பிறகு இது தீவிரம் பெற்றுள்ளது.

கடந்த ஏழு மாத காலமாக கூடன்குளத்தை பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை வந்த வன்முறையில் ஈடுபடாமல் அகிம்சை வழியில் இப்போராட்டம் தொடர்கிறது.

திங்கள், 19 மார்ச், 2012

கோத்ரா கலவரம்: மோடி அரசு, நானாவதி கமி்ஷனுக்கு சு்ப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

அகமதாபாத்:  கோத்ரா கலவரம் தொடர்பாக நானாவதி கமிஷன் முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

என்.டி.எஃப் சகோதரர் கொல்லப்பட்ட வழக்கில் 3 சி.பி.ஐ (எம்) கட்சியினர் கைது!

தள‌ச்சேரி: கேரளாவில் என்.டி.எஃப்-ன் (தற்போது பாப்புலர் ஃப்ரண்ட்) சகோதரர் முஹம்மது ஃபஸல் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ.எம் கட்சியினைரைச்சேர்ந்த மூவரை கைது செய்துள்ளனர். 
என்.டி.எஃப் இயக்கத்தின் தளச்சேரி பகுதி தலைவராக இருந்து வந்தவர் முஹம்மது ஃபஸல். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாலை பொழுதில் நாளிதழ் விநியோகித்துக்கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இவ்வழக்கினை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ.எம் கட்சியினரைச் சேர்ந்த அருண் தாஸ் (எ) அருட்டன் (28), எம்.கே. காலேஷ் (எ) பாபு (34) மற்றும் பி.எம் அருண் குமார் ஆகிய மூவரையும் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அம்மூவரையும் மார்ச் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி கட்டளையிட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக அவர்களை மேலும் விசாரிக்க வேண்டுமென்பதற்காக அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவேண்டுமென சி.பி.ஐ அதிகாரிகளி நீதிமன்றத்தில் மனு  கொடுத்துள்ளனர்.