நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 12 ஜூலை, 2011

மும்பை குண்டுவெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது

மும்பை குண்டுவெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது
உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது
பல அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு பலரை கடுமையாக காயமடையச் செய்த மும்பை குண்டுவெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது .
 
வருங்காலங்களில் இதுபோன்ற கொடூர தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து மும்பை தாக்குதலுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் மும்பையை உலுக்கிய , அப்பாவிகளின் உயிரைக்குடிக்கக் கூடிய , நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஊறுவிளைவிக்கும் தீவிரவாத பிரச்சினை இன்னும் தொடர்வதையும் இந்த புதியா தாக்குதல் எடுத்து காட்டுகிறது.

எனவே அவசரப்பட்டு அப்பாவிகளை கைதுசெய்துவிட வேண்டாம் எனவும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தீவிரவாதத்தின் மூளையாக செயல்பட்ட உண்மையாக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என காவல்துறையை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய கேட்டுக்கொள்கிறது .
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் சரியாக அறிவுறுத்தியபடி காவல்துறை ஊடகம் உட்பட சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் அவதூறுகளை பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் .
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் காயம் பட்டு உயிர்தப்பியவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.