நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 26 மார்ச், 2012

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழாமற்றும் பொதுக்கூட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் வைத்து நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய தலைவர் .எம்அப்துர்ரஹ்மான்கலந்துகொண்டார்.
ஆம்புலன்ஸ் சாவியை குமரி மாவட்ட தலைவரிடம் ஓப்படைக்கிறார் தேசிய தலைவர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டுவருகிறதுபாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஏழை மற்றும் பாமரமக்களுக்கு மருத்துவம்கல்வி உட்பட பல்வேறு தொண்டுகள் நடந்து வருகிறதுஇதன் ஒருபகுதியாக குமரி மாவட்ட சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஆம்புலன்ஸ் சேவைதுவக்கப்பட்டுள்ளதுஇதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவையின் துவக்கவிழா மற்றும்பொதுக்கூட்டம் 25ந்தேதி (ஞாயிற்றுக்கிழமைமாலை 6:50 மணிக்கு நாகர்கோவில்,இடலாக்குடியில் வைத்து நடைபெற்றதுஇந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின்மாவட்டத்தலைவர் சுல்பிக்கர் அலி தலைமை தாங்கினார்மாவட்ட செயலாளர் ரூஹுல் ஹக்வரவேற்புரையாற்றினார்.  மாலிக்தீனார் பைத்துல்மால் ஜமாஅத் தலைவர் அப்துல் கஃபூர்,கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் தலைமை இமாம் பஸ்லுல் ஹக் மன்பஈ,இஸ்லாமிக் சேனல் நிர்வாக இயக்குனர் அல்காலித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  குமரி மாவட்ட ஆம்புலன்ஸ்
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஃபைசல் அஹமது துவக்கவுரையாற்றினார்குமரிமாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் ஜி.எம்.ஷாஇஸ்லாமிய கலாச்சாரப் பள்ளிதலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானிதிருவனந்தபுரம் எஸ்.எம்.சி.எஸ்.மருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் பிளஸட் சிங்க்சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டிஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் முபாரக்குமரி மாவட்ட இஸ்லாமிய முன்னேற்றசங்கத்தின் தலைவர் பீர் முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
குமரி மாவட்ட இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பீர் முகம்மதுக்கு  நினைவு பரிசுவழங்குகிறார் தமிழ் மாநில பாப்புலர் ஃப்ரண்ட்  தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் அப்துர்ரஹ்மான் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்துசிறப்புரையாற்றினார்மேலும் மாநில தலைவர் .எஸ்.இஸ்மாயில்பத்திரிகையாளர்கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்தக்கலை பகுதி தலைவர்அபூதாஹிர் நன்றியுரையாற்றினார்இந்நிகழ்ச்சிக்கு அனைத்து ஜமாஅத்களை சேர்ந்தபொதுமக்கள்பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி. தொண்டர்கள்பல்வேறு சமூகஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.