நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 25 மே, 2012

சென்னையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்பாளர்களுக்கு எதிராக போடப்பட்ட பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும், அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

எஸ்.டி.பி.யின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீத், மாநில செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் ஹுஸைன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் இஸ்மாயில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இளஞ்சேகுவாரா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பெரியார் தாசன் என்ற டாக்டர் அப்துல்லாஹ் மற்றும் எஸ்.டி.பி.ஐயின் வட சென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.