நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 14 மார்ச், 2013

சிங்கள அரசை கண்டித்து சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை: இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது. 13.03.2013 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது, SDPI யின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைக் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனர், தலைவர் உமர் பாரூக், இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீபா, தோழர் T.S.S. மணி[PUCL], சகோதரி சரஸ்வதி[PUCL], மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.முருகன் ஆகியோர் இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.

இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் முகம்மது மீரான் நன்றியுரை கூறினார்.