நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 30 ஜூன், 2013

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கல்வி உதவித் தொகைக்கான வழிகாட்டி முகாம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்கள் பூர்த்தி செய்தல் மற்றும் வழிகாட்டி முகாம்.

1ஆம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்க்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் மற்றும் அதற்க்கான வழிகாட்டுதல் முகாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக 30-06-2013 ஞாயிறு அன்று தென்காசி காட்டு பாவா உயர் நிலை பள்ளியில் வைத்து நடந்த்து.

இந்த முகாமை தென்காசி நகர பாப்புலர் ஃப்ரண்ட் நகர தலைவர் P.முகம்மது தாரிக் தொடங்கி வைத்தார். நகர நிர்வாகிகள், பாதுஷா, ஜிந்தா மாதர், சுலைமான், மீரான் ஆயோர் முன்னிலை வகித்தனர்.


இந்த முகாமில் 1100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பெற்றுச் சென்றனர். இந்த முகாம் காலை 10மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பாக வழி நடத்தினார்.