நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 6 ஜூன், 2013

கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு : டி.எஸ்.பி சந்திரபால் சஸ்பெண்ட்


நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.


என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி, மசூதின் மனைவி ஹஸனம்மாள் மற்றும் குழந்தைகளுக்கு ரூ.8,56,000/ஐ இழப்பீட்டு தொகையாக தமிழக அரசு கடந்த 2011ம் ஆண்டு வழங்கியது.

இந்நிலையில் மசூது கொலையில் ஈடுபட்ட டி.எஸ்.பி சந்திரபால் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் .