நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சுதந்திர தின பொதுக் கூட்டத்திற்கு தடை! தேசிய கொடியுடன் 300க்கும் மேற்பட்டோர் கைது!


கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திரதின பொதுக்கூட்டம் 15-08-2013 அன்று மாலை 7 மணியளவில் நடத்த தீர்மானிக்கபட்டிருந்த்து. இதில் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் உறையாற்றுவதாக அறிவிக்கபட்டிருந்தது.

காவல் துறை கண்டிப்பாக அனுமதி மறுத்ததால் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தனர் .மாலை 6மணியளவில் மாவட்ட தலைவர் D.செய்யது இப்ராஹீம் உஸ்மானி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் அறிவிக்கப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முயன்றனர். காவல்துறை அவர்களை தடுத்து கைது செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம்,நகர தலைவர் காதர் அலி நகர செயலாளர் முகம்மது கனி உள்ளிட்டோர் கலந்து ஒற்றுமை கோஷங்களை எழுப்பியவாறு கைது ஆயினர்.


கைது செய்யப்பட்ட பொதுமக்களை காவல்துறை சேனைத்தலைவர் மண்டபத்தில் தங்கவைத்தனர் தகவலறிந்த பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் சேனைத்தலைவர் மண்டபத்தை முற்றுகையிட்டனர் தொடர்ந்து பொது மக்கள் வருகை அதிகரித்ததால் செய்வதறியாது திகைத்த காவல்துறை இறுதியாக மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனே விடுவிக்க முடிவு செய்து மக்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் மக்கள் திரளாக மண்டபத்தில் புகுந்து தடை செய்த பொதுக்கூட்டத்தை மண்டபத்தினுள் நடத்தினர்