நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி

  நமது தேசத்தின் 67 வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் கடையநல்லூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் மொளலவி செய்யது இப்ராஹிம் உஸ்மானி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  கடையநல்லூர் நகர தலைவர்  காதிர் அலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தேசிய கொடியை மாவட்ட தலைவர் ஏற்றிவைத்தார். மாவட்ட செயலாளர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் உறுதிமொழி கூற திரளாக கலந்து கொண்ட் அனைவரும்
அவ் உறுதிமொழி ஏற்றனர்.
                   கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்பு  மாவட்ட தலைவர் தலைமையில் நகர உலாவந்து அனைத்து குடிமக்களுக்கும்
தேசிய கொடி ஸ்டிக்கர் மற்றும் இனிப்பு விநியோகிக்கப்பட்டது. இக்கொடியேற்ற மற்றும் நகர உலா (இந்) நிகழ்ச்சியில் எஸ். டி. பி. ஐ. இன் மாவட்ட தலைவர் ஜாஃபர் அலி உஸ்மானி, மாவட்ட துணைத்தலைவர் யாசர்கான், பொதுச்செயலாளர் ஹுசைன், மாவட்ட செயலாளர் ஹக்கீம், மாவட்ட பொருளாளரும் 29 வார்டு நகர்மன்ற உருப்பினருமான நைனாமுஹம்மது என்ற கனி நகர தலைவர் அபூலைஸ், நகர பொருளாளர்
பாதுஷா, மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர செயலாளர்
முஹம்மது கனி மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
               
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரங்கோவில், சுரண்டை ஆகிய இடங்களிலும் நகரநிர்வாகிகள் தலைமையில் கொடியேற்றம் மற்றும் இனிப்பு
வழங்கும்  நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.