நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

சுதந்திர தின கொண்டாடத்திற்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர்களை எதிர்த்து வழக்கு தொடரவேண்டும்!

கொச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடத்தவிருந்த சுதந்திர தின கொண்டாடத்திற்கான் நிக்ழ்ச்சிகளுக்கு தடை விதித்த நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மீதும் வழக்கு தொடரப்படவேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் குமார் அவர்கள் தெர்வித்துள்ளார்.



         பாப்புலர் ஃப்ரண்ட் அஃப் இந்தியாவின் சார்பாக பல வருடங்களாக கேரளாவில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நான்கு மாவட்டங்களில் இந்த சுதந்திர கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான அனுமதியை பெறுவதற்காக உரிய முறையில் மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு அதற்கான வேண்டுகோளும் வைக்கப்பட்டது. ஆனால் நான்கு மாவட்ட ஆட்சியர்களாலும் எந்த ஒரு தகுந்த காரணமும் இன்றி சுதந்திர தின கொண்டாடத்திற்கு தடை விதித்தனர்.

         ஒரு இந்தியன் தனது தேசியக்கொடிக்கு செய்யும் மரியாதையாகும் இதனை தடுப்பது இந்தய சட்டப்படி ஒரு இந்தியனின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். இத்தகைய கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுப்பது என்பது தேசத்திற்கு இழைக்கும் அவமதிப்பாகும். கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றமும் நவீன் ஜிந்தால் வழக்கில் இவ்வாறே தீர்ப்பு வழங்கியுள்ளது.

        சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவது சுதந்திர தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாகும். தேசியக்கொடிக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக இத்தைகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் வினோதமாக இருந்தது. ஒரு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிக்கு மற்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த ஓரே காரணத்திற்காக அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று ராம் குமார் கூறினார்.

         இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தை "கருப்பு நாள்" என்று கூறிய "டைஃபி" அமைப்பிற்கு இன்று வரை சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர தின கொண்டாடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.