நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 19 டிசம்பர், 2011

இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு



கடந்த டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் கூடியது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க துணை தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில், பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர் மு. முஹம்மது ஷேக் அன்சாரி மற்றும் ஆரிஃப் ஃபைசல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‌1. கடந்த நவம்பர் 26, 27ல் டெல்லியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு தேசிய அளவில் குறிப்பாக வட இந்தியாவில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவில் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுள்ளது  இம்மாநாட்டில் பல மாநிலங்களிலிருந்து பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு மாநாடு வெற்றியடையச் செய்துள்ளார்கள். இம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

2. முல்லை பெரியார் அணை விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை உடனே நடை முறைப்படுத்திட வழிவகை செய்ய வேண்டும். மேலும் அமைதிப்பூங்காவான தமிழகத்தில் இப்பிரச்சனையினால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணித்து அமைதியை நிலை பெறச் செய்ய மாநில அரசு தேவையான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

‌3. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தாமதித்து கொண்டிருப்பதை மாநில செயற்குழு கண்டிக்கிறது. மாநிலத்திலும் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு 3.5% சதவீதத்திலிருந்து 5% சதவீதமாக உயர்ந்த பரிசீலனை செய்யப்படும் என்ற தேர்தல்  வாக்குறுதியிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மத்தியில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு மற்றும் மாநிலத்தில்5% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை, கோவை மற்றும் மதுரையில் வருகின்ற ஏப்ரல் 22, 2012 அன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

4. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அணுமின் நிலையங்களின் ஆபத்துகளை கருத்தில் கொண்டும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு மத்திய அரசு கூடங்குளம்  அணுமின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு

‌ஏ.காலிது முஹம்மது
(மாநில பொதுச்செயலாளர்)