நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 10 ஜூலை, 2012

பள்ளிவாசலில் பன்றிக்குட்டியை கொன்ற வீசிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்


சென்னை:-  புதுவண்ணாரப்பேட்டை மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் அமைந்துள்ள மஜ்ஸிதே மதினா பள்ளிவாசல் உள்புரம் கடந்த சனிக்கிழமை மாலை சமூக விரோதிகள் சிலர் பன்றிக்குட்டியை கொன்று அதன் உடலை பள்ளிவாசலில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டிய காவல்துறையினர் இச்சம்பவத்தை மூடி மறைத்த்தோடு மட்டுமல்லாமல் கண் துடைப்பிற்காக 12 முதல் 15 வயதிற்கு உட்பட சில சிறுவர்களை கைது செய்து பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.
   
    இச்சமபவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இது தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. அஹமது ஃபக்ருதீன்,மாநில பொருளாளர் அஸ்கர்,சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் ஆகியோர் சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்துள்ளனர்.
       முஸ்லிம்களின் புனித ஸ்தலத்திற்குள் பன்றியை கொன்று வீசும் செயல்கள் தமிழகத்தில் தற்போது தொடர்கதையாகி வலுகிறது.இதே போன்ற சம்பவம் கடந்த வருடம் மதுரையிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மத மோதல்களை உருவாக்க சமூக விரோதிகள் முயற்சி செய்வதாகவே தெரிகிறது. எனவே காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு,
இப்றாஹிம்(மாநில பொருளாளர்)