பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - வின் சார்பாக வருடந்தோறும் ( Healthy People Healthy Nation ) ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு மக்கள் மத்தியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது .
இவ்வருடம் பிப்ரவரி 10 முதல் 20 ஆம் தேதி வரை இப்பிரச்சாரம் செய்ய தீர்மானக்கப்பட்டு இதனுடைய துவக்க விழா பிப்ரவரி 10 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது .
இதனை தொடந்து நெல்லை மேற்கு மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - வின் மாவட்ட செயலாளர் மௌலவி ஹாஜா இமாம் அவர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்பட்டது பிப்ரவரி 10 முதல் 18 ஆம் தேதி வரை Running .Walking . யோஹா . மற்றும் உடல் பயிற்சிகளும் நடைபெற்றது . பிப்ரவரி 19 ஆம் தேதி நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, வலலம், பண்பொழி, வடகரை, போன்ற பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் பள்ளி வாசல் வளாகத்திலும் சுத்தம் செய்யப்பட்டது .