நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 2 பிப்ரவரி, 2012

பெண்களிடம் செருப்படி வாங்கிய இந்து முன்னனியினர்

அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கூடன்குளம் அனுமின் நிலைய எதிர்பாளர்களுக்கும் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழுவிற்கும் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை இந்து முன்னனியினரின் கேடுகெட்ட செயலால் நடைபெறாமல் போயிற்று. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற வேண்டிய இப்பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னால் அங்கு வந்த இந்து முன்னனியினர் கூடன்குளம் எதிர்பாளர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்து முன்னனியினரை செருப்பால் அடித்த பெண்கள்
  பாளையங்கோட்டையைச்சேர்ந்த காவல்துறையினர் இந்துமுன்னனியின் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார் உட்பட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசின் பேச்சு வார்த்தை குழு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான அமர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதிகள் குழுவின் தலைவர் முத்து நாயகத்திடன் ஆலோசனை நடத்திய பின்பு தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறது.
பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் எஸ்.பி. உதயகுமார் கூறும்போது பேச்சுவார்த்தைக்கென்று வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத சூழலும் அதே சமயம் போராட்டத்தை தீவரப்படுத்தும் எண்ணமே அதிகரிக்கும்" எனக்கூறினார்.


இந்து மத வெறியர்களாலும் மத்திய அரசாலும் ஏவப்படும் இது போன்ற ஜனநாயகமற்ற செயல்களை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மாடியில் மாநிலக்குழுவினரான புஷ்பராயான் மற்றும் ஜேசுராஜ் ஆகிய இருவரின் வருகைக்காக காத்திருந்த மத்திய அரசுக்குழு காத்துக்கொண்டிருந்த சமயம் இந்து முன்னனி தலைவரான ஜெயக்குமார் தன்னுடைய சகாக்களுடன் அங்கு வந்து கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி தவறான வதந்திகளை தூத்துக்குடி மாவட்ட பிஷப் ஆம்புரோஸ் மற்றும் டாக்டர் உதயகுமார் ஆகிய இருவரும் பரப்பி வருவதாகவும் எனவே உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு வந்ததாக கூறினர்.

அச்சமயம் அங்கு வந்து கொண்டிருந்த அணு உலை எதிர்ப்புக்குழுவின் உறுப்பினரான் முகிலனை நோக்கி ஓடிச்சென்று வாகனத்திலிருந்து அவரை இழுத்து இந்து முன்னனியினர் தாக்கினர். முகிலனோடு வந்திருந்த அணு உலை எதிர்ப்புக்குழுவைச்சேர்ந்த 16ற்கும் மேற்பட்ட பெண்கள் உடனே ஜெயக்குமார் மற்றும் அவருடைய சகாக்களை சுற்றி வழைத்து தங்களது செருப்பை கழட்டி சரமாரியாக இந்து முன்னனியினருக்கு கொடுத்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து இப்பிரச்சனையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். வந்து தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னனியினர் அனைவரையும் கைது செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அணு உலை எதிர்ப்பாளர்கள் இந்து முன்னனியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதன் பிறகு டாக்டர் உதயகுமார் இனிமேல் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தயார் இல்லை என்றும் மத்திய அரசு தங்கள் மீதான அராஜக போக்கை கையாண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.


இச்செய்தியை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து கிராம மக்கள் உடனே விரைந்து வந்து இத்தாக்குதலை வன்மையாக கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் டாக்டர் உதயகுமாரின் வேண்டுகோளுக்கு இனங்க 4.30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்து முன்னனியினரின் இந்த காட்டுமிராண்டித்தனம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்து முன்னனி என்று தங்கள் இயக்கத்திற்கு பெயர் வைத்துக்கொண்டு அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு (இந்துக்களுக்கு) எதிராக தாக்குதலை நடத்தியதன் மூலம் தாங்கள் இந்து முன்னனியினர் அல்ல என்றும் பிராமண முன்னனியினர் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
கேடுகெட்ட இந்து முன்னனியினரே! உங்களுடைய எல்லா பாஷைகளையும் புரிந்து வைத்திருக்கின்ற ஒரு இயக்கம் தான் இருக்கிறதே! அவர்களோடு மோதுவதற்கு துப்பில்லாத நீங்கள் அப்பாவி மக்களை தாக்குதல் நடத்தி பிரபலம் அடைய எண்ணுகிறீர்களா?