நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 18 ஏப்ரல், 2012

“ச‌ஃபாரே இன்ஸாஃப் ஓ பசார்ய யாத்திரா”


புதுடெல்லி: தீவிரவாதத்திற்கு எதிராகவும் அப்பாவி இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ச‌ஃபாரே இன்ஸாஃப் ஓ பசார்ய யாத்திரா” (நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான பயணம்) என்ற தலைப்பில் மனித உரிமை அமைப்புகளின் சார்பில் யாத்திரை நடத்தப்படுகிறது.
கடந்த 12-ம் தேதி புதுடெல்லி பாட்லா ஹவுஸ் அருகே தொடங்கிய இந்த யாத்திரை உத்திரபிரதேசம் (ஆக்ரா மற்றும் ஜான்ஸி), போபால் (காந்த்வா, புர்ஹான்பூர் மற்றும் ஜால்கான்), மஹாராஷ்டிரா (மாலேகான், புனே), கர்நாடகா (பெல்கம், ஹூப்லி, பெங்களூர்) வழியாக வருகின்ற 20-ம் தேதி சென்னை வந்தடைகிறது.
சென்னை சேப்பாக்காத்திலுள்ள பத்திரிகையாளர் சந்திப்பு அலுவலகத்தில் மாலை 4 மணியளவில் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடந்து இலக்கம் 184/229, 2வது மாடி, லிங்கிசெட்டி தெரு, மண்ணடியில் மாலை 5:30 மணியளவில் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களினாலும், அப்பாவி இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதினாலும் நாட்டின் அமைதி, சகோதரத்துவம், இன ஒருமைப்பாட்டிற்கு கேள்வி எழுந்துள்ளது.
நமது இந்திய தேசத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இரு சமூக மக்கள் மத்தியில் தங்களது கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டு மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்திருக்கின்றனர். இது தான் நம் இந்திய தேசத்தின் பல நூற்றாண்டுகளின் வரலாறு. இப்பேற்பட்ட ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் வேறு எந்த தேசத்திலும் கண்டுவிட முடியாது.
தீவிரவாத தாக்குதல்கள் அனைத்தும் நீங்கி தேச மக்கள் மதநல்லிணக்கத்தோடும் அமைதியாக வாழ வேண்டும் என நாம் உண்மையிலேயே விரும்பினால் தீவிராவாத தாக்குதல்களுக்கான காரணங்களை முழுமையாக ஆராய வேண்டுமே தவிற முன்கூட்டிய அனுமானித்து இவர்கள் தான் தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்று முத்திரையிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம் சுமத்திவிடக் கூடாது. அப்படி செய்வதினால் தொடர்ந்து அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் கேடாகவும் இது அமைந்துவிடும்.
சமீபத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அப்பாவிகள் என்றும் நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மனித உரிமை பாதுகாப்பிற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.
எனவே சட்டவிரோத கைதுகளுக்கு எதிராகவும், தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராகவும் இந்திய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை மாபெரும் யாத்திரை நடைபெறவுள்ளது.
குதாய் கித்மத்கர், என்.ஏ.பி.எம், மிஷன் பாரதியம், என்.சி.ஹெச்.ஆர்.ஓ, அன்ஹாத், சத்பாவ மிஷன் மற்றும் இன்ன பிற மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த விழிப்புணர்வு யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது.