நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...
சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜனவரி, 2014

“இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” – அபூதபியில் EIFF நடத்திய நிகழ்ச்சியில் SDPI மாநிலத் தலைவர் சிறப்புரை!

அபூதபி: அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அபூதபி ஏர்லைன்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று (10.01.2014) பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. 
சிறப்புரையாற்றும் SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி
அதில் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

செவ்வாய், 19 மார்ச், 2013

மாணவர் போராட்டத்தை ஆதரித்து எஸ்.டி.பி.ஐ கட்சி நாளை தமிழகம் முழுவதும் போராட்டம். மத்திய அரசுக்கு தி.மு.க ஆதரவு வாபஸ் வரவேற்கத்தக்கது.


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்  இன்று சென்னையில் நடைபெற்றது.இதன் பிறகு  மாநில தலைவர்  கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி  வெளியிட்டுள்ள அறிக்கையில்PRESSஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.

ஞாயிறு, 10 மார்ச், 2013

திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழு-புதிய நிர்வாகிகள் தேர்வு


திருச்சி :- திருச்சியில் நேற்று (09.03.2013) துவங்கிய எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு இன்று (10.03.2013)மாலையுடன் முடிவடைந்தது.

திருச்சி எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

செவ்வாய், 5 மார்ச், 2013

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயற்குழு கோரிக்கை.


02-03-2013 அன்று செங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி அவர்களின் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அரசு சம்மந்தப்பட்ட மாவட்ட ரீதியிலான அத்தியாவசிய

சனி, 2 மார்ச், 2013

கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை கோரி ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், போர்க்குற்ற விசாரணை நடத்திட ஐ.நா. வை வலியுறுத்தியும், மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் . 

கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. (சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் நேற்று(01.03.2013) கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்ச் 4, “ஈழத்தோழமை நாள்”, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி பங்கேற்ப்பு

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு கூட்டம் ஜெனிவாவில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இம்முறை இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை கொண்டு வர முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
புலம் பெயர் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஜெனிவாவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக மார்ச் 4 தேதி ஈழத்தோழமை நாள் என அறிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் சார்பில்

வெள்ளி, 1 மார்ச், 2013

பூரண மதுவிலக்கு : வைகோவின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம்!எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பங்கேற்பு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி SDPI கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 17 வரை தமிழக முழுவதும் மனித சங்கிலி, ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தலைமைச் செயலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை வீரியமாக நடத்தியது. 
தொடர்ந்து கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கேற்ற மாபெரும் பேரணியை நடத்தியது. மேலும் அடுத்த மாதம் மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

வியாழன், 28 பிப்ரவரி, 2013

நடுத்தர ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்-எஸ்.டி.பி.ஐ

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்திய நாட்டின் 82 வது பொது பட்ஜெட்டினை 8 வது முறையாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் நடுத்தர, ஏழை மக்களை வாட்டி வதைக்கும் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
பட்ஜெட்டின் முன்னுரையின் போது, நிதியமைச்சர் அன்னிய முதலீடின்றி இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாகாது என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த பட்ஜெட் அந்நிய முதலீட்டை மையப்படுத்தியே அமைந்துள்ளது. இதனால் இந்திய வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இது அபாயகரமானது, நாட்டின் நலனுக்கே எதிரானது. 

புதன், 30 ஜனவரி, 2013

பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியை தடை செய்! தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!


சென்னை: நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சங்க்பரிவார அமைப்புகள் தான் என்ற உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்பரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் நேற்று (ஜனரி-30)  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில  தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.

வியாழன், 25 அக்டோபர், 2012

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் SDPI 50 தொகுதிகளில் தனித்து போட்டி

எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக மாநில செயற்குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார். கட்சியின் தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் கான் செயற்குழுவுக்கு தலைமை வகித்தார். 

மாநிலத் தேர்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி தெரிவித்தார். இந்தூரைச் சேர்ந்த முஹம்மத் சலீம் அன்சாரீ, அப்துர் ரவூஃப், குவாலியர் அப்துல் கனி, ஜபல்பூர் இர்ஃபானல் ஹக், தேவஸ் ஹஃபிஸ் ஷப்பீர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

திங்கள், 10 செப்டம்பர், 2012

கூடங்குளம்​:போலீஸ் பயங்கரவாதம் ​-தெஹ்லான், நெடுமாறன், வேல்முருகன் கண்டனம்!


திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது அராஜக தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுஅப்பகுதியை கலவரக் காடாக மாற்றியுள்ள தமிழக ஜெயா அரசின் காவல்துறைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம்​-போலீஸ் பயங்கரவாதம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ, ம.ம.க சாலை மறியல்!


சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜக தாக்குதலை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட  எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளத்தில் இன்று காலை அமைதியான வழியில் போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்திய காவல்துறையினரை கண்டித்தும், இடிந்தகரை பகுதியில் இருந்து

திங்கள், 30 ஜூலை, 2012

இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ


புதுடெல்லி : அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இ.அபூபக்கர்
இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘இரு கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் ஆவர். மாநில அரசு கற்பனை எண்ணத்தை கைவிட்டு நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம்,SDPI கட்சியின் 200 தொண்டர்களுக்கும் மேற்பட்டோர் கைது


தமிழக மீனவர் சேகர் மீது துப்பாக்கிசூடு நடத்தி கொலை சைய்த அமெரிக்க  கப்பல் படையை கண்டித்தும்,இந்திய சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய 
முதலீடு தேவை என்று கருத்து கூறிய அமெரிக்க ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் SDPI கட்சியின் அமெரிக்க தூதரகம்  முற்றுகை போராட்டம் இன்று(19:07:2012)காலை 11 மணி அளவில் அமெரிக்க தூதரகம் முன்பு  முற்றுகை போராட்டம்  தொடங்கியது, இதில் SDPI  மாநில செயலாளர் சையது அலி அவர்கள் தலைமை தங்கினார்கள்,


வெள்ளி, 13 ஜூலை, 2012

காவல் நிலையத்தில் இறந்த வியாபாரிக்கு நீதி கேட்டு SDPI கண்டன ஆர்பாட்டம்



காஞ்சிபுரம் மாவட்டம், கானத்தூர் காவல் நிலையத்தில் வியாபாரி ஹுமாயூன் தீ வைத்து இறந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (12-07-2012) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வெள்ளி, 25 மே, 2012

சென்னையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்பாளர்களுக்கு எதிராக போடப்பட்ட பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும், அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

வியாழன், 24 மே, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற SDPI கோரிக்கை


சென்னை:கூடங்குளம் போராட்டக்குழு மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே25 ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது.
SDPI demands unconditional withdrawal of cases against protesters who applied koodankulam
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு
‘கூடங்குளம்  அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட சென்னை மாவட்ட தலைவர் எஸ். அமீர் ஹம்ஜா தலைமை தாங்கினார்.
தமிழக மக்களால் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்ற திட்டம் தான் சேது சமுத்திர திட்டம். பொருளாதார ரீதியிலும், வேலை வாய்ப்பிலும் தமிழகத்தை முன்னேறச் செய்யும் இந்த திட்டத்தை முடக்கவும் இதனை செயல்படுத்தவிடாமல் தடுக்கவும் ஃபாசிஸ கும்பல்கள் இராமர் பெயரை உபயோகப்படுத்திக்கொண்டு அந்த மணல் திட்டை இராமர் பாலம் என்றும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருகின்றனர்.