நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 29 செப்டம்பர், 2011

கடையநல்லூர் ஊராட்சி வார்டுகளுக்கு 336 பேர் மனு தாக்கல்




கடையநல்லூர் :   கடையநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட 16 ஊராட்சிகளிலுள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு புதன்கிழமை வரை 336 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி-2 பேர், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி-29 பேர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி-63 பேர், வார்டு உறுப்பினர் பதவி-336 பேர்.
கடையநல்லூர் நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சோஷியல டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் 5 பேர் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

13-வது வார்டுக்கு லுக்மான் ஹக்கீம், 30-வது வார்டுக்கு S.முஹம்மது கனியும், 28-வது வார்டுக்கு K.செய்யது மக்தும் 32-வது வார்டுக்கு ஹக்கீம் மற்றும் 29-வது வார்டுக்கு கடையநல்லூர் சோஷியல டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் நகரதலைவர் S.நயினா முஹம்மது(எ)கனி ஆகிய 5 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

வேட்பாளர்களுடன் மாவட்ட பொதுச் செயலாளர் யாசர் கான்(பாப்புலர் டையர்),பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி மற்றும் PFI செயல் வீரர்களும் , SDPI செயல்வீரர்களும், ஏராளமான பொதுமக்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.