நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 1 அக்டோபர், 2011

சென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!


SDPI மேயர் வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க முயன்றதால் 
  சென்னை  மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!
போராட்டத்தை தொடர்ந்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது

 
    விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின்  கூட்டணியின் சார்பாக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ( SDPI )வின் S.அமீர் அவர்கள் மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற  வேட்பு மனு பரிசீலனையின் போது, SDPI வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் SDPI தொண்டர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அனைத்து விதமான தகவல்களும் முறையாக கொடுக்கப்பட்டுசிறந்த வழக்கறிஞர்கள் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்பே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டே வேட்பு மனுவை நிராகரித்தது தெரிய வந்தது. இந்த தகவல் வெளியானதும்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் SDPI யின் மாநிலபொதுச் செயலாளர்கள்நெல்லை முபாரக்பி. அப்துல் ஹமீது மற்றும் இஸ்லாமிய சமுதாய ஒருங்கிணைப்பாளர் ஹனிபா,சுன்னத் ஜமாத் தலைவர் மேலை.நாசர்தேசியலீக் தலைவர்,தடா ரஹீம் ஆகியோர் உடனடியாக மாநகராட்சி ரிப்பன் பில்டிங் வந்தனர்.
இதே போல் ஏராளமான  SDPI தொண்டர்கள்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில் அங்கு குவிந்தனர். இதனால் காவல் துறை அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தொல் திருமாவளவன் அவர்களும், SDPI  யின் நிர்வாகிகளும்,தேர்தல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை  நடத்தினர்.. அதே போல் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே  கூடிய  SDPI விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

போராட்டத்தை தொடர்ந்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
              
               
                      
               
           வேட்பு மனு ஏற்று கொண்டதை அடுத்து நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தனர்