நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 28 ஜனவரி, 2012

தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் தகவல் அறிய வேண்டுகோள்






  1. எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)
  2. விண்ணப்பம் கைகளால் எழுதப்படலாம் அல்லது தட்டச்சு செய்யப்படலாம்.India Development Gateway Portal என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  3. விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது சமர்ப்பிக்கலாம்
  4. பின்வரும் தகவல்களோடு மனுவை தரவேண்டும்.
    1. மனுவைப் பெற்றுக்கொண்ட துணை பொதுதகவல் அதிகாரி (APIO) அல்லது பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர்.
    2. பொருள்: தகவல் அறியும் சட்டம் பகுதி 6(1) இன் படி மேல் முறையீட்டுக்கான விண்ணப்பம்.
    3. பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கும் தகவல்கள்.
    4. விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்
    5. பிரிவு SC, ST & OBC
    6. விண்ணப்பக் கட்டணம்.
    7. வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் (BPL) வசிப்பவரா? ஆம்/இல்லை
    8. கைபேசி எண் (mobile no) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் (இரண்டும் கட்டாயமில்லை) அஞ்சல் முகவரி.
    9. தேதி மற்றும் இடம்.
    10. மனுதாரரின் இடம்.
    11. மனுதாரரின் கையொப்பம்
    12. இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல்..
  5. மனு செய்வதற்குமுன் துணை பொதுதகவல் அதிகாரி/பொதுத்தகவல் அதிகாரியின் பெயர், கூறப்பட்டுள்ள கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை ஆகியனவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவும்.
  6. தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் அறியும் மனுவினுக்கான கட்டணம் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் ஆகியோருக்கு மனுவினைப்பெற கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
  7. கட்டண விலக்கு வேண்டுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்கள் என்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.
  8. மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம். அஞ்சலில் அனுப்புவதாக இருப்பின் பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் (courier) அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.
  9. விண்ணப்பம்/மனுவினை இரண்டு நகல் எடுக்கவும். (அதாவது, மனு, பணம் கட்டியதற்கான ரசீது, நேரில் அல்லது அஞ்சலில் மனு அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆகியன) அவைகளை பின்னாள் ஒப்பிடுதலுக்காக (future reference) பத்திரமாக வைத்திருக்கவும்.
  10. நேரில் உங்களது மனுவை சமர்ப்பித்திருந்தால் அலுவலகத்தில் தேதியும் முத்திரையும் கூடிய ரசீதைப்பெற்று மிகக் கவனமாக வைத்திருக்கவும்.
  11. கேட்ட தகவலைத் தரவேண்டிய காலம், பொதுத் தகவல் தொடர்பு அதிகாரி மனுவை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து தொடங்குகிறது.

பின் வருவனவற்றையும் கவனத்தில் கொள்க


வ.  எண்       

சூழல்
தகவலைத் தரவேண்டிய கால அவகாச எல்லை
1சாதாரணமாக தகவலைத் தெரிவிக்க30 நாள்
2கேட்கப்படும் தகவல் ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைக் குறித்ததாக இருப்பின்48 மணி நேரம்
3துணை பொதுதகவல் அதிகாரி(APIO) மனுவைப் பெற்றிருந்தால்மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு சூழல்களுக்கான கால அவகாசத்துடன் மேலும் 5 நாள் சேர்த்துக்கொள்ளப்படும் (30 நாள்+5 நாள்)/48 மணி நேரம் + 5 நாள்)