நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 23 ஜனவரி, 2012

உள்ளத்தை தூய்மை படுத்த தஸ்கியா வகுப்புகள் நடைபெற்றது

கடையநல்லூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் தஸ்கியா எனும் (உளத்தூய்மை) வகுப்பு நடத்தப்பட்டடது.  அந்த வகையில் நெல்லை மேற்கு மாவட்ட சர்பாக கடையநல்லூர் EB அருகிலுள்ள கூபா மஸ்ஜிதில் வைத்து 21 ஆம் தேதி  தஸ்கியா வகுப்பு நடைபெற்றது இதில் திரளாக மக்கள் கலந்துகொண்டனர்








மனிதன் பலகீனமான நிலையிலேயே படைக்கப்பட்டுள்ளான். அவனது ஈமான் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் எனவே நமது இறை நம்பிக்கையை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் வகையில் தஸ்கியா வகுப்புகள் நடைபெற்றது.


இதில் தொழுகை, மனோ இச்சை, அபு உபைத் இப்னு ஜர்ராஸ் (ரழி) அவர்களின் வரலாறு, போன்ற தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றது. 21ஆம் தேதி மஃரிப் முதல் 22ஆம் தேதி அஸர் வரை நடைபெற்ற இந்த பயிற்ச்சி வகுப்பில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தஸ்கியாவில் சிறப்பு அம்சமாக மரண சிந்தனையை ஏற்படுத்தவும், கப்ருவுடைய வாழ்க்கையை நினத்து பார்ர்கும் விதமாக கப்ரு ஜியாரத்தும் நடைபெற்றது.


رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ


 எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286