நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 13 ஜனவரி, 2012

ரவுடி நாடான இஸ்ரேலின் கருவியாக இந்தியா செயல்படக்கூடாது!

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் இஸ்ரேலுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. துரதிஷ்ட வசமாக‌ நம்முடைய அரசு அமெரிக்கா மற்றும் அதனின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் கடுமையான கொள்கையை செயல்படுத்தும் கருவியாக செயல்பட்டு வருகின்றது.

இந்தியா இஸ்ரேலின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலின் தூதரகம் பெங்களூரில் திறக்கப்படும் என்ற முடிவை தேச நலனிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஒன்றாக பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது. மதவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வரும் இந்துத்துவ ஃபாசிஸ்டுகள் கையில் சிக்குண்டு கிடக்கும் மாநிலமான கர்நாடகாவில் இஸ்ரேலிய தூதரகம் அமையவிருப்பது ஃபாசிஸ்டுகளுக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும்.

சியோனிச தீவிரவாத கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் நாடான இஸ்ரேல்தான் நவீன கால தீவிரவாதத்திற்கு வித்திட்டு வருகின்றது என்பதனை நாகரீக உலகில் உள்ள அனைவரும் அறிவர். குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளாக சியோனிச தீவிரவாதத்தால் பாதிப்பிற்குள்ளாகி வரும் பலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் தீவிரவாதத்தை நன்கு அறிவர். இஸ்ரேல் தன்னுடைய தூதரகத்தை இந்தியாவில் டில்லியிலும் ஏற்படுத்தப்பட்டு 1992ஆம் ஆண்டு பரஸ்பரத்தை துவங்கினர். இந்தியாவில் இஸ்ரேலிய தூதரகம் துவங்கப்பட்டு பின்புதான் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாக இந்தியா பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தனது கணக்கை துவங்கியதிலிருந்து பலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் இஸ்ரேல் இழைத்து வரும் அக்கிரமங்களை எதிர்த்து எடுக்கப்படும் தீர்மானங்களில் இந்தியா தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.

மஹாத்மா காந்தி சொன்னது போன்று எப்படி இங்கிலாந்து - ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமோ அது போன்று பஸ்தீன் பலஸ்தீனர்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தாங்கள் நிலைத்திருப்போம்  என ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல தருணங்களில் உறுதிபடுத்தியுள்ளது.

பலஸ்தீனை பிரிக்கக்கூடிய விவகாரத்தில் இந்தியா எப்போதுமே எதிர் கருத்தைத் தான் கொண்டுள்ளது. மேலும் யூதர்கள் மற்றும் பலஸ்தீனர்களுக்கு சமமான அரசியல் உரிமையை வழங்கும் ஒரு தேச கொள்கையிலும் இந்தியா உறுதியாக இருந்து வந்துள்ளது. ஜவஹர்லால் நேருவின் காலம் தொட்டு ராஜீவ் காந்தி காலம் வரை இது தான் நம்முடைய கொள்கையாக இருந்து வந்தது.

எனவே, பலஸ்தீன மக்களின் துயரங்களோடு நாங்களும் இருக்கின்றோம் என்பது போன்று காட்டிக்கொண்டு மறுபுறம் ரவுடி நாடான இஸ்ரேலை அரவணைக்கும் நயவஞ்சக போக்கினை இந்தியா உடனடியாக கைவிட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஐக்கிய முற்போக்கு அரசினை கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.