நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 12 ஜனவரி, 2012

முழி பிதுங்கும் சங்கப்பரிவாரங்கள்



வேலியில் மேய்ந்த‌ ஓநாணை எடுத்து எதற்குள்ளோ விட்ட கதையாகிப்போனது சங்கப்பரிவாரங்களின் தற்போதைய நிலை. ஆம்! கர்நாடக மாநிலத்தில் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய தேசியக்கொடியை மதிக்காத, அதனை தேசியக்கொடியாக அங்கீகரிக்காத பண்டார பரதேசிகளான சங்கப்பரிவார கும்பல்கள் பாகிஸ்தான் நாட்டுக்கொடியை ஏற்றி விட்டு தற்போது ஆப்பசைத்த குரங்காக முழி பிதுங்கி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.


முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு விரோதிகள்!
முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் வசிப்பதற்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது!
முஸ்லிம்களின் ஓட்டுரிமையை பரிக்க வேண்டும்!
பெரும்பான்மை மக்களான இந்துக்களை அனுசரித்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்!
முஸ்லிம்கள் தீவிரவாதிகள்!

தினமும் சோறு திண்பார்களோ இல்லையோ! ஆனால் ஒவ்வொரு சங்கப்பரிவார தீவிரவாதியும் இதனை ஒரு நாளும் உச்சரிக்காமல் இருக்கமாட்டான். காரணம் அவர்கள் தான் தேச தியாகிகள்! இப்பேற்பட்ட தேசத் தியாகிகள் வேஷ்டிகள் அவிழ்ந்து மானம் பரிபோய் கொண்டிருப்பதை காணும் போது பாமர மக்களின் உமிழ் நீரைக்கொண்டே இவர்கள் குளிப்பாட்டப்பட்டு வருகிறார்கள்.

கர்நாடகா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு பிஜாபூர் மாவட்டத்திலுள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு பாகிஸ்தான் நாட்டு தேசியக்கொடியை ஏற்றிவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு அதன் மூலம் வன்முறையை தூண்ட முயன்றனர் இந்த சங்கப்பரிவார பாகிஸ்தான் உளவாளிகள். குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட கதையாய பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆனால் கர்நாடக காவல்துறை துரிதமாக செயல்பட்டு ஸ்ரீராம் சேனா என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகளை கைது செய்தனர்.

இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் சேனாவின் தலைவன் பிரமோத் முத்தலிக் கூறும் போது எங்கள் இயக்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இதனை செய்தது ஆர்.எஸ்.எஸ் தான் என்று தன்னுடைய தாய் கழகத்தின் மீது குற்றத்தை சுமத்துகிறான். ஆர்.எஸ்.எஸ்ற்கும் ஸ்ரீராம் சேனா இயக்கத்திற்கும் மத்தியில் நாம் எந்த வித வேறுபாட்டையும் காண இயலாது. எல்லாமே ஒரே குட்டையில் உருண்ட மட்டைகள் தான். இவர்கள் மட்டுமல்ல சங்கப்பரிவார அமைப்புகள் அனைத்துமே இந்தியாவில் வன்முறையை தூண்டக்கூடிய அமைப்பாக விளங்கி வருகிறது. அவை அனைத்தையும் உடனே மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

இச்சமயத்தில் சங்கப்பரிவார கும்பல்களின் கோர முகம் வெளிவந்து கொண்டிருக்கும் சமயம் இந்துகளுக்காக செயல்படும் இயக்கம் என்று தங்களை காட்டிக்கொள்ள முயலும் இவர்களுடைய தகிடுதத்தங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்லும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்தியாவில் வசித்துக்கொண்டு பாகிஸ்தான் நாட்டிற்கு பல்லக்கு தூக்கம் இத்தகைய தேசவிரோத சக்திகளை எதிர்த்து போராட அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.



சங்கப்பரிவாரங்களை எதிர்த்து மங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்!

G.Rajashekhar
G.Rajashekhar
Razaq Kemmara

 Mangalore protest 
Mangalore protest