நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 18 ஜனவரி, 2012

லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தது செல்லும்: மோடி அரசின் மனு தள்ளுபடி


அஹ்மதாபாத் : குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் கமலா பெனிவால் நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நிரப்பப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாநில ஆளுனர் கமலா பெனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தார்.
இதற்கு மோடியும், பா.ஜ.கவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் பெனிவாலின் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டி மோடி அரசு உயர்நீதிமன்றத்தை அணுகியது. முதல்வர் மற்றும் அரசிடம் கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்ததாகவும், ஆளுநர் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் மோடியின் அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக,கடந்த அக்டோபர் மாதம், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்பை வழங்கினர்.
இதனால்,இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அகில் குரோசியிடம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் நியமித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். மேலும் மோடி அரசின் மனுவும் தள்ளுபடிச் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு மோடிக்கு பலத்த அடியாகும்.