நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 18 ஜனவரி, 2012

லோக் ஆயுக்தா என்பது மோடியின் கபட நாடகம் – காங்கிரஸ் குற்றச்சாற்று


புதுடெல்லி : குஜராத் மாநிலத்தில் ஆளுநர் கமலா பெனிவால் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து குஜராத் முதல்வர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடியின் கபடநாடகத்திற்கும், பா.ஜ.கவின் இரட்டை வேடத்திற்கும் இன்னொரு சட்டரீதியான விளக்கம்தான் நீதிமன்ற தீர்ப்பு என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுக்குறித்து காங்.செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்துள்ள பேட்டியில் கூறியது: ‘ஒன்பது ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த லோக் ஆயுக்தா பதவியை நிரப்பாமல் இருந்த பா.ஜ.க அரசு, மாநில் ஆளுநரும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் இணைந்து நியமித்த லோக் ஆயுக்தாவுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி நியமனத்தை மேலும் தாமதப்படுத்தியுள்ளனர். ஆனால், இதே கட்சிதான் லோக்பால் நியமனத்திற்காக டெல்லியில் கூக்குரலிடுகிறது.
டெல்லியில் எது நடக்கிறதோ அது குஜராத்தில் கூடாது. குஜராத்தில் நடப்பது டெல்லியில் கூடாது என்பது பா.ஜ.கவின் நிலைப்பாடாகும். இத்தகைய தந்திரங்களை உயர்நீதிமன்றம் தகர்த்துவிட்டது என்றார் சிங்வி.
பா.ஜ.க தலைமை வகிக்கும் குஜராத் அரசின் ஊழல் தொடர்பாக அன்னா ஹஸாரே மெளனம் சாதிக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். மோடியின் ஊழலை குறித்து கண்ணை மூடியிருக்கும் ஹஸாரேயின் போக்கு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.மோடிக்கு ஹஸாரே புகழாரம் சூட்டினார். இவ்வாறு திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
பா.ஜ.க குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கூறுகையில், ‘கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு’ என பதிலளித்துள்ளது.