நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 31 அக்டோபர், 2011

இரண்டு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது எஸ்.டி.பி.ஐ


     மௌலவி அஸ்ரப் அலி ஃ பைஸி,
  மூலக்கரை பஞ்சாயத்து ,
                   தூத்துக்குடி (போட்டி இன்றி வெற்றி).
நாகூர் கனி 
                                  
பேரூராட்சி மன்ற துணை தலைவர்,
பூலாங்குடியிருப்பு ,திருநெல்வேலி 

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் புலாங்குடியிருப்பு பேரூராட்சியில் துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியைச்சார்ந்த நாகூர் மைதீன் வெற்றிப்பெற்றார். 15 உறுப்பினர்களைக்கொண்ட பேரூராட்சியில் ஒன்பது வாக்குகளை நாகூர் மைதீனும், காங்கிரஸ் கட்சியைச்சார்ந்த திவான் ஆறுவாக்குகளும் பெற்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் மூலக்கரை கிராமபஞ்சாயத்தில் துணைத்தலைவர் பதவி எஸ்.டி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.மெளலவி அஷ்ரஃப் அலி ஃபைஸி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தமிழ்நாடு துணைத்தலைவராக உள்ளார் அஷ்ரஃப் அலி ஃபைஸி. தமிழக உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 62 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.