கடந்த மார்ச் மாதத்தில் 1379 மருத்துவர்கல் 10(ஏ) (ஐ) என்ற டி.என்.பி.எஸ்.சி யின் சிறப்பு விதி மூலம் பொது சுகாதார துறையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் அனைத்து அரசு தேர்ந்தெடுப்புகளிலும் முஸ்லிம்கள் சமூகத்திற்கு 3.5% தனி இடஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில் 1349 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்ட போது ஒரு முஸ்லிம் கூட தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டில் இதே போன்ற தேர்வில் 2438 நபர்களில் 88 பேர் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
