நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 8 நவம்பர், 2011

இந்தியாவில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படாத வழக்குகள் 72 லட்சம்

criminal
புதுடெல்லி : இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுவரை 72 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் தேங்கியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கலவரம், பாலியல் வன்புணர்வு ஆகிய வழக்குகள்தாம் தீர்ப்பளிக்கப்படாத வழக்குகளில் பெரும்பகுதியாகும்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் இதில் முன்னணி வகிக்கிறது.ஏழு யூனியன் பிரதேசங்களிலும், 28 மாநிலங்களிலும் 72,58, 502 வழக்குகள் 2010 ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்டுள்ளன.