நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

திருப்பூரில் பாதிக்க பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஆறுதல்


திருப்பூர் நொய்யல் ஆற்று வெள்ள பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் அம்மக்கள் தங்க இடமின்றி,உணவு கிடைக்காமல் மிகவும் அவதி பட்டனர் .இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  அவர்களை கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து மேலும் அவர்களுக்கு உண்ண உணவும் அளித்தது.வெள்ள நிவாரண முகாமில் பாதிக்க
பட்டவர்களுக்கு ஆறுதல் கூற பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S . இஸ்மாயில் மற்றும் SDPI இன் மாநில பொதுசெயலாளர் S .M .ரபீக் அஹ்மத் ஆகியோர் சென்றனர் .அங்கு அவர்களுக்கு தேவையான் நிவாரண உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.பாப்புலர் ஃப்ரண்ட்டின் உதவிகளை அறிந்து அங்குள்ள மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

திருப்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் SDPI தொண்டர்கள்

SDPI மற்றும் POPULAR FRONT சார்பாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்

திருப்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் SDPI ன் மாநில பொதுச்செயலாளர் S .M ரபீக் அஹ்மத்