நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

குன்டனாமோ சிறை மூடல் குறித்த எதிர்பார்ப்பு 10 ஆண்டுகளாய் தொடர்கிறது


கியூபாவிலுள்ள குன்டனாமோ விரிகுடா கடற்படை தளத்தில்  அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட குன்டனாமோ விரிகுடா தடுப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பான சிறையும், விசாரணை வசதியும் உள்ளது.
                                                                                         குன்டனாமோ சிறை


ஆப்கானிஸ்தான் போர்க்கைதிகளையும், பிறகு ஈராக் போர்க்கைதிகளையும் சிறை வைப்பதற்காக புஷ் நிர்வாகத்தினால் ஜனவரி 11, 2002 இல் இந்த முகாம் நிறுவப்பட்டது. 

சங்கப்பரிவார கும்பல்களால் மூத்த பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து!

பெங்களூர்: சங்கப்பரிவார கும்பல்கள் தங்களது கொள்கைகளை பரப்பவும் இந்து ராஷ்டிரா என்ற கிரிமினல் அஜ்ன்டாவை ஏற்படுத்துவதற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்து மத குருவான சுவாமி விவேகானந்தரின் பெயரை உபயோகப்படுத்தி வருகிறது.


ஆனால் விவேகானந்திரின் போதனைகளும் சங்கப்பரிவார கும்பல்களின் செயல்பாடுகளுக்கும் எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன.

லிபியாவில் ஷரீஅத் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி பிரம்மாண்ட பேரணிகள்


திரிபோலி : எதிர்கால லிபியா அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டமாக இருக்கவேண்டும் என கோரி லிபியாவில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. தலைநகரான திரிபோலி, ஸபா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியிலும் பேரணிகள் நடைபெற்றன.

திருக்குர்ஆனை உயர்த்திப் பிடித்தவாறு மக்கள் இப்பேரணிகளில் கலந்துகொண்டதாக எ.எஃப்.பி கூறுகிறது. இஸ்லாத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மார்க்கமாக(religion) மாற்ற அரசியல் சாசனத்தில் பிரத்யேக பிரிவை இணைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எகிப்து:அதிக இடங்களை கைப்பற்றிய இஃவானுல் முஸ்லிமீன் – அதிகாரப்பூர்வ அறிவிப்ப

கெய்ரோ : ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சி ஜனநாயக புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்ட பிறகு எகிப்து பாராளுமன்றத்திற்கு நடந்த முதல் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்


அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி 47 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிந்தனைக் கொண்ட ஸலஃபிகளின் அந்நூர் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

பெரும் போலீஸ் படை பாதுகாப்புடன் மோடி நடத்திய உண்ணாவிரத நாடகம்


கோத்ரா : ஸத்பாவனா உண்ணாவிரத தொடரின் ஒரு பகுதியாக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி பாதுகாப்புடன் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அரங்கேற்றினார்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடைபெற்று 10-வது ஆண்டு நிறைவுற இன்னும் ஒரு மாதம் மீதமிருக்கையில் உண்ணாவிரதத்தை மோடி நடத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஆர்.நடராஜ் நியமனம்


சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக செல்லமுத்து இருந்தார். அவர் தனது பதவியை கடந்த வாரம் திடீரென ராஜிநாமா செய்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.
மானந்தவாடி(கேரளா) : சத்தியத்தை குறித்த தேடுதலில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இளைஞரை தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாட தேசிய புலனாய்வு ஏஜன்சியும், மாநில போலீசாரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்தவர் பிலால்.இவர் தற்பொழுது வயநாடு மானந்தவாடியில் வசித்துவருகிறார். புலனாய்வு அதிகாரிகளின் பகையை தீர்த்துக்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை தயாராகி வருகிறார் பிலால்.

வியாழன், 19 ஜனவரி, 2012

நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உங்களின் நிஜங்கள்

பத்திரிக்கைதுறையினரால் பழிவாங்கப்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயம், தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக மக்களின் சக்தியை ஒருமுகப்படுத்தாமல் இஸ்லாம் சார்ந்த இதழ்களிலேயே இழைப்பறிக் கெண்டிருக்கின்றன. அதற்கு முக்கியக்காரணம் அத்துறைில் காணப்படும் வெற்றிடமே! அவ்வெற்றிடத்தை வென்றெடுத்திடவே இளம் கைகளில் எழுதுகோலை கொடுத்து எமது இந்தப் பணியினை துவங்கினோம். சிறிய அகவில் துவங்கப்பட்ட இப்பணி இன்று பல்லாயிரம் வாசகர் வட்டத்தை தன்னுள் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நடக்கும் சம்பவங்கள் நிறம்மாறி வரும் காலங்களில் நிஜங்களாக வரவேண்டும்  என்பதற்காக. எழுத்தாளமும், கருத்தாளமும் கொண்ட எங்களின் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அனுப்பும் கருத்துக்களே வலுசேர்க்கின்றன.  நான்காம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அரவணைக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

                                                                                                             -ஆசிரியர் குழு-


கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை


கோழிக்கோடு :  முஸ்லிம்களில் பொது மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல்களில் கேரள காவல் துறை ஊடுருவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 


இது குறித்து மாநில முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது வலியுறுத்தியுள்ளார்.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் கொலைகளை கண்டித்து மணிப்பூரில் எஸ்.டி.பி.ஐ பேரணி


இம்பால் : நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கொலைச் செய்ததை கண்டித்து சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பேரணி நடத்தியது.

இஸ்ஹாக் அலி(வயது 25), முஸ்தகீம்(வயது 24) ஆகிய இளைஞர்களின் படுகொலைக் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பேரணியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அதிரையில் தீ விபத்து - மீட்புப் பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்


அதிரை c .m.p லைன் v .k .m ஸ்டோர் அருகே உள்ள ஒரு வீட்டில் மாடியில் இருந்து கூரை திடுரென தீப்பிடித்து மளமளவென   பரவியது . இது பற்றி தகவலறிந்த பொதுமக்களும் அதிரை நகர  பாப்புலர்  ப்ரண்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர் .  பாப்புலர்  ப்ரண்ட் செயல்வீரர்கள் தீயை அனைத்த்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர் .  பாப்புலர்  ப்ரண்ட் செயல் வீரர்களின் பணியினை அதிரை காவல் ஆய்வாளர் திரு.செங்கமலக்கண்ணன் வெகுவாக பாராட்டினார் .