அஹ்மதாபாத் : 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஆனந்த் மாவட்டம் ஓதேவில் 23 முஸ்லிம்கள் கொடூரமாக உயிருடன் எரித்துக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் 18 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முதல்வர் மோடியின் ஆசிர்வாதத்துடன் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலை இந்திய வரலாறு காணாத மிகவும் கொடூரமானதாகும். அவ்வேளையில் ஆனந்த் மாவட்ட ஓதேவில் வெறியுடன் நுழைந்த காவி வெறியர்கள் முஸ்லிம்களை கொலைச்செய்ய தேடினர். அப்பொழுது சங்க்பரிவார கயவர்களுக்கு பயந்து 3 மாடிக் கட்டிடத்தில் உயிருக்கு அஞ்சி பதுங்கியிருந்த 23 பேரை கண்டனர். அவர்கள் இருந்த வீட்டை ஹிந்து வெறியர்கள் ஈவு இரக்கமின்றி எரித்தனர். இதில் 9 குழந்தைகள் உள்பட 23 பேர் எரிந்து பலியாகினர்.




