நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 19 அக்டோபர், 2011

ஐஸ்ஹவுஸில் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு

சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அடுத்த மாதம் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடக்கவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. தமிழகத்திலும் அதன் பிரச்சாரத்தின் தொடக்கமாக வருகின்ற ஞாயிற்றுகிழமை 23ஆம் தேதி அன்று சென்னை ஐஸ்ஹவுஸ் ஷேக் தாவூது தெருவில் நடத்த சென்னை செயற்குழுக் கூட்டம் முடிவெடுத்துள்ளது.


‌1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமூக இயக்கமான "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" குறிகிய காலங்களில் இறைவனின் மிகப்பெரும் கிருபையால் இந்தியா முழுவதும் வேகமான வளர்ச்சியை அடைந்து சமூகப் பணிகளை
முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென் இந்தியாவில் மட்டுமே இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் சில வருடங்களுக்குள் வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் கால்பதித்து சமூக மக்களிடம் அதிக‌ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வரை தென் இந்தியாவில் மட்டுமே மாபெரும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் தற்போது முதன் முறையாக தேசத்தின் தலை நகரமான டெல்லியில் மாபெரும் மாநாட்டை நடத்த இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! இந்தியாவின் பல மா நிலங்களிலிருந்தும் மக்கள் பங்கெடுக்க இருக்கும் இந்த மாநாட்டிற்கான பிரச்சாரம் தேசம் முழுவது நடைபெற்று வரும் வேலையில் தமிழகத்திலும் இதன் பிரச்சாரம் தொடங்கவுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற சென்னை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வருகின்ற ஞாயிற்றுகிழமை திருவல்லிக்கேனி ஐஸ்ஹளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாசிம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  சமூதாயத் தலைவர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக முஹம்மது நாசிம் அவர்கள் தெரிவித்தார். சமூக மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.