நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 6 ஜனவரி, 2014

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்! இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… 


பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டர் தற்போது ஆண்டுக்கு

நியாயமான கோரிக்கை

செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலை....

செங்கோட்டையில் 21வது வார்டு துப்புரவு செய்யமலிருந்த பகுதியை. எஸ்.டி.பி.ஐ.கவுன்சிலர் சாகுல்ஹமீது பாதுஷா அவர்களின் முயற்சியால் சுத்தம் செய்யப்பட்டது.


முகைதீன் பாதுஷா's photo.முகைதீன் பாதுஷா's photo.முகைதீன் பாதுஷா's photo.
மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் கண்டுகொள்ளத 21வது வார்டில் அண்ணாநகர தெருவில் உள்ள ஓடை பாலம் உடைந்து அதை பார்வையிடும் எஸ்.டி.பி.ஐ. நகரசெயளாலர் அஸ்கர் அலி மற்றும் ஜாபர் அவர்கள்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக மக்கள் மாநாடு:பாப்புலர் ஃப்ரண்ட்,எஸ்.டி.பி.ஐ உள்பட பல கட்சிகள்,இயக்கங்கள் பங்கேற்ப்பு


நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 04.01.14 அன்று அணுவுலை எதிர்ப்பு மாநாடு துவங்கியது.இந்த எதிர்ப்பு மாநாட்டில் அணுவுலை எதிர்ப்புகுழு தலைவர் உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்,அணுவுலை எதிர்ப்புகுழுநிர்வாகி புஷ்பராயன் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.இந்த மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S இஸ்மாயில்,எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி ,விடியல் வெள்ளி பத்திரிக்கை துணை ஆசிரியர் ரியாஸ் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் நவவி உள்ப்பட அனைத்து கட்சிகள்,இயக்கங்கள் ,சமுக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கொலம்பஸிற்கு முன்பே அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்தார்!


வாஷிங்டன்: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாலுமியும், தேடலாய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரபல கணித மேதையும், விஞ்ஞானியுமான அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்துள்ளார் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்டரி டுடே பத்திரிகையில் பிரபல அமெரிக்க ராஜீய வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான ஃபெடரிக் இதுக்குறித்து ஆய்வை வெளியிட்டுள்ளார்.


சனி, 4 ஜனவரி, 2014

முஸ்லிம் மாணவிகளின் திறமையை வளர்க்க 978 கோடி திட்டம்!

இந்தியாவில் 14 வயதுக்கு மேலான முஸ்லிம் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் மத்திய அரசு ரூ. 978 கோடி மதிப்பிலான திட்டத்தை தயாராக்கியுள்ளது. திறமை என்ற பொருள்படும் HUNAR என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டம் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
girls

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெற்றோர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா சார்பாக 01-01-2014 புதன் அன்று நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கடையநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்புக் கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக, கடையநல்லூரில் மீண்டும் பரவிவரும் மர்மக் (டெங்கு) காய்ச்சலைக் கட்டுப் படுத்தும் விதமாக ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டும் மேலும் நில வேம்புக் கசாயம் வழங்கப்பட்டும் வருகிறது.

திங்கள், 4 நவம்பர், 2013

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

புதன், 30 அக்டோபர், 2013

சென்னையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்திய பொதுக்கூட்டம் !



ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மத்தியில் 10% மாநிலத்தில் 7% முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசை வலியுறுத்தி மண்ணடி தம்புச் செட்டி தெருவில் 27. 10. 2013 அன்று மாலை 6. 30 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ் மாநில தலைவர் மௌலவி ஏ. ஆபிருத்தீன் மன்பயீ அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

சிறை நிரப்பும் போராட்டம் - சென்னை மற்றும் மதுரையில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும்,பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் ,கருப்பு சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் இன்று (06.10.2013) நடைபெற்றது.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

ஏன் சிறைநிரப்பு போராட்டம்?பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அறிக்கை



தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், அநீதிகளைக் கண்டித்தும் எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரமும் நிறைவாக அக்டோபர் 6 ஆம் தேதி அன்று சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் சிறைநிரப்பு போராட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.


பதவி உயர்வுக்காக அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதியாக மாற்றியது அம்பலம்



டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு தீவிரவாத முத்திரை குத்தி பொய் வழக்கில் கைது செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை டெல்லி விசாரணை நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ளது. 


உத்தர பிரதேஷ் மாநிலம் முஷ்பாரபத் கலவரத்தில் உதவி செய்வதற்கு பாப்புலர் ப்ரண்ட் தமிழகத்தில் வசூல் செய்த விபரம்:

நெல்லையில் அறிவகம் கூட்டு குர்பானி ஒரு பங்கு 1600ருபாய்


திங்கள், 23 செப்டம்பர், 2013

மோடி திருச்சி வருகை!பெருகும் எதிர்ப்பு!!அலறும் பா.ஜ.க!!!

நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக திருச்சியில் நரமாமிச நரேந்திர மோடியை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்!



  குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களின் மீது நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான அம்மாநில முதல்வரும்,பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கண்டித்து நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக திருச்சியில் நேற்று  (21-09-2013) மனித சங்கிலி மற்றும் கண்டன போராட்டம் நடைபெற்றது.நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் திருச்சி மாவட்ட தலைவி மெஹராஜ் பானு ஆலிமா தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் சித்திக்கா வரவேற்புரையாற்றினார்.


சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? அனைத்து இயக்க தலைவர்கள் சந்திப்பு



"அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது  தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது , நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

புதுடெல்லியில் பாட்லா ஹவுஸ் என்கவுண்டருக்கு நீதி வேண்டி மாணவர்கள் பேரணி!

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்து 5 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகம் நோக்கி பேரணி நடத்தினர்.முஸ்லிம் வேட்டையை நிறுத்துங்கள்! அரச பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! உள்ளிட்ட முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.


பேரணிக்கு தலைமை வகித்த கேம்பஸ் ஃப்ரண்டின் தலைவர் அப்துல் நாஸர் கூறும்போது; ‘பாட்லா ஹவுஸ் சம்பவத்தில் சுதந்திரமான விசாரணையை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும். சுதந்திரமான விசாரணைக்கு காங்கிரஸ் ஏன் அஞ்சுகிறது?

முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போலீசுக்கு நற்சான்றிதழ் வழங்கினாலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் இந்த என்கவுண்டரின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இவ்விவகாரத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. விசாரணை நடத்தி சந்தேகங்களை தீர்க்க வேண்டாமா? பாட்லா ஹவுஸ் சம்பவத்தில் விசாரணை நடத்தாவிட்டால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு ஒரு காரணமாக அது மாறிவிடும்.’ இவ்வாறு அப்துல் நாஸர் கூறினார்.

‘தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை பொய்யாக சிக்க வைப்பது ஏராளமான சம்பவங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது.’ என்று கேம்பஸ் ஃப்ரண்டின் அனீஸுஸ்ஸமான் தனது உரையில் கூறினார்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

முஸாஃபர் நகர் கலவரம் - பின்னணியில் பா.ஜ.க வின் மதவாத அரசியல் : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!


புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் நடந்து வரும் கலவரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சமூகங்களிடையே பா.ஜ.க வெறுப்பு மற்றும் பகைமையை தூண்டுகிறது. கலவரத்தில் அப்பாவிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தை உடனடியாக தடுக்காவிட்டால் மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் பரவும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. உள்ளூர் சம்பவத்தை பல உயிர்களை பறிக்கும் வகையில் மிகப்பெரிய கலவரமாக மாற்றியதில் பா.ஜ.க எம்.எல்.ஏ முக்கிய பங்கினை வகித்துள்ளார்.
 
மேலும் முஸ்லிம் கும்பலால் ஒரு சிறுவன் அடித்து கொல்லப்படக்கூடிய பொய்யான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. ஆனால் இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கு வெளியே பதிவுச் செய்யப்பட்ட வீடியோவாகும். இந்த வீடியோவை கூட ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ தான் பகிர்ந்துள்ளளார். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் மிக மோசமான நிலைமை ஏற்படும். மாநில அரசு சரியான நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கட்டுப்படுத்தியதால், ஒரு பெரிய அளவிற்கு கலவரம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 
 
கலவரம் பிற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தி, அனைத்து குடிமக்களின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவையான எல்லா நடவடிக்கைகளையும்  மாநில மற்றும் மத்திய  அரசுகள் உடனே எடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. இக்கலவரத்திற்கு பின்னணியில் உள்ள உண்மைக் குற்றவாளிகளை வெளிக்கொண்டுவரும் வகையில், பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.
 
எல்லா சமூகங்களைச் சேர்ந்தவர்களும் குற்றவாளிகள் மற்றும் வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உத்தரபிரதேச மக்களை கேட்டுக் கொள்கிறது.
 

இப்படிக்கு 
 
O.M.A.ஸலாம்
 
தேசிய பொதுச் செயலாளர்
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா