புதுடெல்லி : டெல்லி இஸ்ரேல் தூதரகத்தின் வாகனத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பிருப்பதாக நியூ சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த அவதூறு செய்தி அடிப்படையற்றதும், கண்டித்தக்கதுமாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதால் போலீஸ் பாப்புலர் ஃப்ரண்டை பின்தொடர்வதாக அச்செய்தி கூறுகிறது. இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றுவது முதல் தடவை அல்ல. உலகில் சியோனிச அமைப்புகள் தீவிரமாக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால் ஏராளமான முஸ்லிம் அல்லாத அமைப்புகளும் இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.’ இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.