ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி உலக சித்திரவதை எதிர்ப்பு தினமாக ஐ.நா. சபையால் அனுஷ்டிக்கப்படுகிறது. மேற்படி சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) இன்று 29.06.2013 சென்னை பெரியமேட்டில் உள்ள ஹோட்டல் பனாரில் காலை 11.00 மணி முதல் 1.30 வரை “காவல்துறையின் சித்திரவதைககள், என்கவுண்டடர்கள் மற்றும் பொய் வழக்குககள் ” என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வுக் கூட்டடத்திற்கு NCHROவின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர். ஏ. முஹம்மது யூசுப் தலைமை தாங்கினார்.. வழக்கறிஞர் ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்., இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சத்தியசந்திரண், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்PUCLசெயலாளர் நெல்லை முபாரக், த.மு.மு.க. செயலாளர் பேராசிரியர். ஹாஜா கனி கக்இஃ அமைப்பின் செயல்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர் T.S.S.மணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ரூதீன், பத்திரிகையாளர் ஆளுர் ஷாநவாஸ், கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் முஹம்மது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ.ன் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கோபிநாத், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன், NCHROவின் மக்கள் தொடர்பு அலுவலர் வழக்கறிஞர் ஏ.சையது அப்துல் காதர், வழக்கறிஞர்கள் ஏ. முஹம்மது ஷாபி, (மதுரை), முஹம்மது நவ்ஃபல் (கோவை), சதாத் (சென்னை), முஹைதீன் அப்துல் காதர் (சென்னை), முஹம்மது பைசல் (திருவாரூர்) மற்றும் பல உயர்நீதிமன்ற வழக்கறிõகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள்.






















