நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 15 செப்டம்பர், 2011

பஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்


பஜ்ருத் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதித்துத் தொழும் எண்ணத்தில் வேண்டுமென்றே அலாரத்தைத் தாமதமாக வைப்பது தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுவதாகவே கருதப்படும். தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுபவன், சில அறிஞர்களின் பார்வையில் காபிர் ஆவான். - தொழுகையை வேண்டுமென்று விடாமலிருக்க அல்லாஹ் உதவி செய்வானாக!
    எனினும் யாருக்குத் தூக்கம் மிகைத்து உரிய நேரத்தை விட்டும் தொழுகை தவறிப் போகிறதோ, அவர் மீது குற்றமில்லை. விழித்தெழுந்ததும் அவர் தொழுது விட வேண்டும். அவ்வாறே குறித்த ஒரு தொழுகையை மறந்து விட்டவர் ஞாபகம் வந்ததும் தொழுது விட வேண்டும்.
    அதல்லாமல் வேண்டுமென்றே தொழுகையை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்துவது அல்லது தாமதித்துத் தொழ வேண்டும் என்ற நோக்கத்தில் கடிகாரத்தில் நேரம் வைத்துத் தாமதித்து எழுவது இவை அனைத்தும் வேண்டுமென்று தொழுகையை விடுவதாகவே கருதப்படும். இவ்வாறு செய்வது எல்லா அறிஞர்களதும் பார்வையில் மிகப் பெரும் பாவமாகவே கருதப்படுகிறது. என்றாலும் இவன் காபிராகி விடுவானா இல்லையா? என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.
    பெரும்பாலான அறிஞர்கள் இவன் காபிராக மாட்டான் என்று கருதுகின்ற அதேவேளை, சில அறிஞர்கள் அவன் காபிராகி விடுவான் என்று கூறுகின்றனர். இரண்டாவது சாராரின் கூற்றுக்கு ஒத்ததாகவே ஸஹாபாக்களின் நிலைபாடும அமைந்திருந்தது என்பது இங்கு நோக்கத்தக்கது.
    'ஒரு மனிதனுக்கும் ஷிர்க் குப்ருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
    மேலும், 'நமக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகையாகும். யார் தொழுகையை விடுகிறானோ அவன் காபிராவான்' என்று கூறினார்கள். (நூல்கள் : அஹ்மத், திர்மிதி, நஸயி, இப்னுமாஜா)