நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 27 அக்டோபர், 2011

பயங்கரவாதத் தொடர்பை மறைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி

புது தில்லி : பயங்கரவாதிகளுடன் தங்களுக்குள்ள தொடர்பை மறைப்பதற்காக பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்-ம் முயற்சிப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் குற்றம்சுமத்தியுள்ளார். இதற்காக அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரை அவை பயன்படுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திக்விஜய் சிங் தனது இணையதளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சித்து இவ்வாறு எழுதியுள்ளார்.

அத்வானியின் ரத யாத்திரை இன்று மதுரை வருகை: நாளை நெல்லை பயணம்


புதன், 26 அக்டோபர், 2011

தலித்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பகையை மூட்ட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

பல்வேறு சமூக, கலாச்சார, மத கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய மக்கள் இந்தியாவில் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கம் சிறு வயது முதலே பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாக்கியமோ வெறும் மேடை பேச்சுக்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்தியாவில் மத மோதல்கள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய  காரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ வெறி பிடித்த தீவிரவாதிகள் தான் என்றால் அது மிகையாகாது.

பாரதீய ஜனதா கட்சி வாக்கு வங்கி சரிவு


தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு நகராட்சிகள், கணிசமாக பதிமூன்று பேரூராட்சிகள் என்று கைப் பற்றி இருந்த போதிலும் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவின் வாக்குவங்கி சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி 2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் 2.34 சதவீத

பங்குச்சந்தை மோசடி:இந்திய வம்சாவழியை சார்ந்தவர் கைது

04rajat1வாஷிங்டன் : நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல பங்குச்சந்தை நிறுவனமான கோல்ட்மான் ஸாக்ஸின் முன்னாள் இயக்குநர் இந்திய வம்சாவழியைச்சார்ந்த ரஜத் குப்தா என்பவர் எஃப்.பி.ஐ முன்னால் சரணடைந்தர்.எஃப்.பி.ஐ அலுவலகத்தில் சரணடைந்த குப்தாவின் கைதை எஃப்.பி.ஐ பதிவுச்செய்தது.


ஹஸாரேவின் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது-காங்கிரஸ்

congress-and-anna-hazareபுதுடெல்லி : தனது குழுவினருக்கு எதிராக நடக்கும் பிரச்சாரத்தின் பின்னணியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்குபேர் குழு என ஹஸாரேவின் அறிக்கை துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் கூறியுள்ளது.


ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்

TH14_MORADABAD__753669fமுராதாபாத் : கடந்த ஜூலை மாதம் உ.பி மாநிலம் முராதாபாத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து போலீஸாரால் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம் சிறுவர்கள் நீதி கிடைக்காமல் 4 மாதங்களாக சிறையில் வாடுகின்றனர்.



தற்கொலைக்கு தூண்டும் ஐ.பி:முஸ்லிம் பெண்ணை வேட்டையாடும் கேரள போலீஸ்

bgதிருச்சூர் : ’தேசத்துரோகியான மகளின் தாயாரான உங்களுக்கு குழந்தைகளுக்கு விஷத்தைக்கொடுத்துவிட்டு தற்கொலைச்செய்யக்கூடாதா?’ என ஒரு ஐ.பி அதிகாரி தன்னை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஷைனாவின் தாயார் நஃபீஸா கூறுகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீசாரின் அட்டூழியத்தால் அனுபவித்துவரும் உள்ளத்தை கலங்கச்செய்யும் துயரங்களை தேஜஸ் நிருபருடன் பகிர்ந்துக்கொண்டார் நஃபீஸா.

RSS இயக்கங்களின் ஒன்றான சனதான் சன்ஸ்த மீது தடை ?


மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் R.R. படேல் கூறுகையில் "2008 தானா தியேட்டர்  குண்டு வெடிப்புக்கு காரணமான சனதான் சன்ஸ்தவை சேர்ந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரமேஷ் ஹனுமான் கர்கரே மற்றும் விக்ரம் விநே வைபவ் ஆகியோரை பற்றி அறிக்கையை கேட்டுள்ளது மேலும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளான மங்கேஷ் தினார் நிகாம் மற்றும் ஹாரி பவன் தேவ்கர் ஆகியோரை பற்றியும் அறிக்கை தருமாறு மத்திய அமைச்சகம் கேட்டுள்ளது." 

SDPI-யின் நகர தலைவரும் 29 வார்டின் கவுன்சிலருமாகிய நயினா முஹம்மது(எ)கனி நகர தலைவரை சந்தித்தார்

SDPI-யின் நகர தலைவரும் 29 வார்டின் கவுன்சிலருமாகிய நயினா முஹம்மது(எ)கனி நகர மன்ற தலைவர் சகோதரி சைப்புனிஸா அவர்களை  இல்லத்திற்கு  சென்று வாழ்த்து  தெரிவித்தார்.

படங்கள் சில கீழே.......

முஸ்லிம் பள்ளி சிறுவர்கள் மீது போலி FIR


 குர் ஆனை காவல்துறையினர் அவமதித்ததை கண்டித்து காவல்துறைக்கும் மோராதாபாட்தில் உள்ள  டின்கர்பூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது இதில் மோராதாபாட் DIG க்கு காயம் ஏற்ப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் டின்கார்பூர், அக்சலாட் நகர் பாகா மற்றும் மைனதர் மக்கள் மீது பல்வேறு போலி வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைதுசெய்தனர்.இந்த கைது நடவடிக்கையில் சில பள்ளி சிறுவர்களும் பலிகடவாக்கப்பட்டனர். அந்த சிறுவர்கள் மீது கொலைமுயற்சி உட்பட IPC யின் பல பிரிவின் படி  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
 

விக்கிலீக்ஸ் மீது பொருளாரதார தடை


உண்மையை உரக்க சொன்ன விக்கிலீக்ஸ் மீது பண பரிமாற்ற தடையை அமெரிகா விதித்துள்ளது. இதனை தொடர்ந்து VISA, MASTER CARD, PAY PEL, WESTERN உணின்,BANK OF AMERICA போன்ற நிறுவனங்கள் விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு பண பரிமாற்றம் செய்வதை தடைவிதித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் 62 இடங்களில் SDPI வெற்றி பெற்றுள்ளது


தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய கட்சிகள் தனித்து களம் கண்ட நிலையில் எஸ்.டி.பி.ஐ பல இடங்களில் தனித்தும் ஒரு சில இடங்களில் சில இஸ்லாமிய இயக்கங்கள், தலித் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவோடு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. இதில் 62 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.

சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க பொதுக்கூட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடைபெற்றது.
MDMK Ideologue Nanjil Sampath Addressing
MDMK Ideologue Nanjil Sampath Addressing at SJC publicity campaign Chennai
வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசத்தின் தலைநகரமான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்ற முழக்கத்தோடு "சமூக நீதி மாநாடு (SOCIAL JUSTICE CONFERENCE ) நடக்க‌ இருக்கின்றது.

கடையநல்லூர் SDPI நகர தலைவர் நைனா முஹம்மத் கனி 29 வார்டு கவுன்சிலராக பதவி ஏற்பு



அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

srinagar_a_kashmiri_mourns_31308புதுடெல்லி : கஷ்மீர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகளை குறித்தும், மாநிலத்திலிருந்து காணாமல் போன் ஆயிரக்கணக்கான நபர்களைக்குறித்தும் முழுமையான விசாரணையை நடத்த மத்திய அரசு தயாராகவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்:வாபஸ் பெறுவது குறித்து மத்திய அமைச்சரவையில் கருத்துவேறுபாடு

Army_Omar_Antony_295x200புதுடெல்லி : கஷ்மீரில் மக்களை துயரத்தில் ஆழ்த்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை அம்மாநிலத்தின் சில மாவட்டங்களிலிருந்து வாபஸ் பெறுவதுக் குறித்து மத்திய அமைச்சரவையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் பேச்சுவார்த்தை மூலம் ஒத்தக்கருத்திற்கு வரவேண்டும் என சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா

E-Ahmed291x21819634ஐ.நா : ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் சட்டவிரோதமாக குடியிருப்புக்கள் கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்.ஃபலஸ்தீன் – இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைக்கு சட்டவிரோத குடியிருப்புக்கள் கட்டுவது தடையாக மாறுகிறது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்காசியா குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் தெரிவித்துள்ளார். ஹமாஸும், இஸ்ரேலும் பரஸ்பரம் கைதிகளை பரிமாற ஒப்பந்தம் செய்ததை வரவேற்ற இ.அஹ்மத் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்கவும், மோதல்களை ஓயச்செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இடைக்கால அரசுக்கு அந்நஹ்ழா தலைமை வகிக்கும்

tumblr_llhug9syyp1qchhhqo1_500துனீஸ் : அரபுலகில் ஜனநாயக புரட்சிக்கு வித்திட்ட துனீசியாவில் நடந்த முதல் தேர்தலில் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழா வெற்றிப்பெற்றுள்ளது. 217 உறுப்பினர்களைக்கொண்ட இடைக்கால பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளதாக அந்நஹ்ழாவின் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலில் SDPI மொத்தம் 62 இடங்களை பிடித்துள்ளது

SDPI வெற்றி பெற்ற இடங்கள்
  1. மாநகராட்சி   : 2
  2. நகராட்சி         : 2
  3. பேரூராட்சி    : 8
  4. ஊராட்சி           : 50
  • மொத்தம்           62

    ராமாயணம் விவாதம்:டெல்லி பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு


    delhi-university


    புதுடெல்லி : டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடத்திட்டத்திலிருந்து ராமாயணம் குறித்த உரைநடையை ஹிந்துத்துவா சக்திகளின் நிர்பந்தத்தை தொடர்ந்து நீக்கியதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு எதிரான ஆன்லைன் பிரச்சாரத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த மற்றும் சாராத ஏராளமான பேராசிரியர்கள், மாணவர்களின் தலைமையில் எதிர்ப்பு வலுத்துவருகிறது.

    துருக்கியில் கடும் நிலநடுக்கம்! : நூற்றுக்கணக்கானோர் பலி


    turky_earthquack


    அங்காரா : கிழக்கு துருக்கியில் நிகழ்ந்த கடும் பூகம்பத்தால் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்துள்ளனர் என கருதப்படுகிறது.ரிக்டர் அளவுகோலில் 7.3 பதிவாகியுள்ள முதல் பூகம்பத்திற்கு பிறகு ஏராளமான பூகம்பங்கள் நிகழ்ந்தன. உள்ளூர் நேரம் 1.40க்கு முதல் பூகம்பம் நிகழ்ந்தது. தலைநகரான அங்காராவிலிருந்து 1200 கி.மீ தொலைவிலுள்ள வான் மாகாணத்தில் தபன்லி நகரத்தில் பூகம்பம் உருவானது.நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் குர்து மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.

    பெங்களூர் பேரணி ரத்தானது எனக்கு தெரியாது, பேரணி திட்டமிட்டப்படி நடக்கும்-எல்.கே.அத்வானி


    AdvaniBangalore


    ராய்ப்பூர் : முன்னர் திட்டமிட்டதுபோல் தனது பெங்களூர் பேரணி நடைபெறும் என பிரதமர் கனவில் ரதயாத்திரை நடத்திவரும் 84 வயதான எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.ஜனசேதனா யாத்திரை தொடர்பாக பெங்களூரில் நடத்தவிருந்த பேரணி ரத்துச்செய்யப்படும் என ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.ஆனால் பெங்களூர் பேரணி ரத்துச்செய்தது குறித்து தனக்கு தெரியாது என எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

    இனப்படுகொலையில் மோடிக்கு தொடர்பு:அமிக்கஸ் க்யூரி


    setback_modi_271x181


    புதுடெல்லி : 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கை தெளிவாக விவரிக்கிறது ஸாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிக்கஸ் க்யூரி(ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுபவர்) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை.

    கஷ்மீரில் நான்கு மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் உடனடியாக வாபஸ்




    Jammu-Kashmir_4

    புதுடெல்லி : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் ஜம்மு-கஷ்மீரின் நான்கு மாவட்டங்களிலிருந்து உடனடியாக வாபஸ் பெறப்படும். ஜம்முவிலும், கஷ்மீர் பள்ளத்தாக்கிலும் இரண்டு வீதம் மாவட்டங்களிலிருந்து இச்சட்டம் வாபஸ் பெறப்படும்.

    திண்டுக்கலில் ம.ம.க குண்டர்கள் தாக்குதல் - எஸ்.டி.பி.ஐ யினர் 3 பேர் படுகாயம்




    திண்டுக்கல்: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரைச் சேர்ந்த 3 நபர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    எஸ்.டி.பி.ஐ 300 இடங்களில் போட்டியிட்டு 56 இடங்களை கை பற்றியது



    தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெறும் பெறும் கட்சிகள் தனித்து களம் கண்ட வேலையில் எஸ்.டி.பி.ஐ சில இஸ்லாமிய இயக்கங்கள், தலித் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவோடு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. இதில் 56 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.

    கோவை: மேயர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய SDPI கூட்டணி!


    கோவை மேயர் தேர்தலில் மற்ற அரசியல் கட்சிகள் யாரும் எதிர்பாராத சிறுபான்மை கூட்டணி வேட்பாளர் அமீர் அல்தாப் 36 ,000 ஓட்டுகளை பெற்றுள்ளார். கோவை மேயர் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, கூட்டணி யில் மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் என பல்வேறு கத்சியால் தனித்தனியே களமிறங்கின. அ.தி.மு.க. வேட்பாளர் திரு.வேலுசாமி 2 ,81 ,728 வாக்குகள் பெற்று வெற்றிபெட்டுள்ளர். 


    கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…

    gaddafi1
    உலகை ஆச்சரியமடைய வைத்த புரட்சியாளராக மாறி கடைசியில் மக்கள் கோபத்தால் மரணத்தை சந்தித்த தலைவர்தாம் மக்ரிப் தேசமான லிபியாவை 42 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த கடாஃபி.

    ஹஸாரே குழுவினருக்கு கிடைத்த 80 லட்சம் மோசடி – கேஜ்ரிவால் மீது அக்னிவேஷ் குற்றச்சாட்டு

    புதுடெல்லி : ஊழலுக்கு எதிராக போராடும் ஹஸாரே குழுவினரில் கிரண்பேடிக்கு அடுத்து முக்கிய உறுப்பினரான அசோக் கேஜ்ரிவால்  மீதும் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹஸாரே குழுவில் முன்பு இடம்பெற்றிருந்த சுவாமி அக்னிவேஷ் தற்பொழுது முக்கிய உறுப்பினரான அசோக் கேஜ்ரிவால் ஹஸாரே குழுவிற்கு கிடைத்த 70-80 லட்சம் ரூபாயை தனது அறக்கட்டளைக்கு மாற்றி மோசடிச் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.agniwesh





    ஜனசேதனா யாத்திரை:அத்வானியின் பெங்களூர் பேரணி ரத்து

    பெங்களூர் : எல்.கே.அத்வானியின் ஜனசேதனா யாத்திரையையொட்டி இம்மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் நடத்த திட்டமிட்டிருந்த பேரணியை பா.ஜ.க ரத்துச் செய்துள்ளது.
    ratah yathra

    மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா


    imagesCAO3TTVD
    புதுடெல்லி : மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. குஜராத் மாநிலம் வளர்ச்சியில் மிகவும் முன்னேறியுள்ளதாக கூறும் நரேந்திரமோடியின் கூற்றில் உண்மையில்லை என உ.பி. முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

    மோடிக்கு எதிராக அமிக்கஸ் க்யூரி உச்சநீதிமன்​றத்தில் அறிக்கை தாக்கல்

    amicus curiae rprt SIT

    அஹ்மதாபாத் : 2002-ஆம் ஆண்டில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென சிறப்பு புலனாய்வு ஏஜன்சி(எஸ்.ஐ.டி)யின் அறிக்கையை அங்கீகரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி(ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு பாரபட்சமற்ற ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்)அறிக்கை அளித்துள்ளது.

    நரேந்திர மோடிக்கு பிடி இறுகுகிறது!




    அகமதாபாத் - 2002 இல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் கள் படுகொலைத் தாக் குதல்களில் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான ஆதாரங்களை, ஜகியா ஜஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் (அமிகஸ் குரியா) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை தந்திருக்கிறது.

    சவூதியிலிருந்து 3 மில்லியன் வெளிநாட்டவ​ர் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்!

    saudia
    சவூதி அரேபியாவின் தொழிலாளர் நல அமைச்சகம், வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் 20 விழுக்காடு தான் இருக்கவேண்டும் என்ற உச்சவரம்பை நிர்ணயித்துள்ளதால், அடுத்த ஒருசில வருடங்களில் சவுதி அரேபியா 3 மில்லியன் வெளிநாட்டவர்களை படிப்படியாக திருப்பி அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.

    சனி, 22 அக்டோபர், 2011

    பாப்புலர் ஃப்ரண்ட் உருவான விதம்



    நம் இந்திய நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், வறுமையை போக்கவும்,  பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றவும் தவறி வருகிறது.

    நம் நாடு சுதந்தரிமடைந்த பிறகு பெரும் வியாபார முதலீட்டாளர்கள் மூலம் பெரும் வளர்ச்சியடைந்தாலும் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளி, 21 அக்டோபர், 2011

    ஹாஜிகளின் சேவையில் இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபாரம் .




    முப்பது இலட்சம் ஹாஜிமார்கள் பரிசுத்தமான ஹஜ் நற்செயலின் பாதுகாப்பு விசயங்களில் சிறிதி கவனம் இருந்தால் விபத்துகளை அதிகமாக குறைக்கவும், சில நேரங்களில் முழுமையாக இல்லாமல் ஆக்கவும் முடியும். கடந்த ஏழு வருட காலம் ஹாஜிமார்களுக்கு உதவிகள் செய்வதற்காக மக்கா, மதீனா, மற்றும் மினாவில் தன்னார்வ தொண்டர்களின் (வாலண்டியர்ஸ்களின்) மூலம் ஹாஜிமார்களுக்காக பெரும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்ற இந்தியா ஃப்ரடர்ணிட்டி ஃபாரம் ( INDIA FRATERNITY FORUM) கடந்த வருடங்களில் செய்த ஹஜ் வாலண்டியர்ஸ் சேவைகளை விரிவாக அலசி ஆராய்ந்ததில் கிடைத்த முன் அனுபவத்தின் அடிப்படையில் ஹாஜிமார்களுடைய பாதுகாப்பிற்காக தயாராக்கப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டிய விஷயங்களை இந்த புத்தகம் உட்படுத்தியுள்ளது.

    புதன், 19 அக்டோபர், 2011

    ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்க திட்டம் !


    மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    மேலும் பெரு நகரங்களில் தங்களுடைய அமைப்பை வேரூன்ற செய்வதற்காக முக்கிய நகரங்களுக்காக தனித்தனியே இணையத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நகரங்களிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரைவில் இணையதளங்களை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக தனது வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பிரசாரக்குகளாக பணிபுரிய இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பிரசாரக் என்றால் திருமணம் புரியாமல் வேறு எந்த பணிகளுக்கும் செல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இதற்கு பல இளைஞர்கள் விரும்பாததால் ஆர்.எஸ்.எஸ் தற்போது தன்னுடைய செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனி பிரச்சாரக்குகள் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அந்த அமைப்பிற்காக முழு நேர ஊழியர்களாக பணி புரிந்தால் போதுமானது என்றும் பிறகு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் பிரசாரக்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பணிகளை தொடர சமூக சேவை அமைப்புகள் என்ற முகமூடியில் நடத்தும் கிளைகளின் மூலம் பிரசாரக்குகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தானில் தொடங்கிய பிரச்சார பொதுக்கூட்டம்

    சவாய் மதோபூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அடுத்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் "சமூக நீதி மாநாடு" டெல்லியில் பிரசித்திப்பெற்ற இடமான ராம்லீலா மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது. இதன் பிரச்சாரங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் மாநாட்டிற்கான பிரச்சாரம் நேற்று முதல் தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க நகரமான சவாய் மதோபூரில் நேற்று சுமார் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் மாநாட்டிற்கான பிரச்சாரம் அம்மாநிலத்தில் தொடங்கியது.

    ஐஸ்ஹவுஸில் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு

    சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அடுத்த மாதம் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடக்கவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. தமிழகத்திலும் அதன் பிரச்சாரத்தின் தொடக்கமாக வருகின்ற ஞாயிற்றுகிழமை 23ஆம் தேதி அன்று சென்னை ஐஸ்ஹவுஸ் ஷேக் தாவூது தெருவில் நடத்த சென்னை செயற்குழுக் கூட்டம் முடிவெடுத்துள்ளது.

    ஞாயிறு, 16 அக்டோபர், 2011

    நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்

    திருவனந்தபுரம்/பெரும்பாவூர்/கோழிக்கோடு : போலீஸ்-ஆட்சியாளர்களின் உரிமை மறுப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மண்டல அளவிலான பேரணிகள் மூன்று நகரங்களை மக்கள் வெள்ளத்தால் திணறடித்தது.fb4






    ’ வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம் உலகமெங்கும் பரவுகிறது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    வாஷிங்டன் : அமெரிக்காவில் பொருளாதார சமமின்மைக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய வால்ஸ்ட்ரீட் போராட்ட மாதிரியில் பல்வேறு நாடுகளிலும் போராட்டம் துவங்கியுள்ளது.occupy-wall-street







    வகுப்பு கலவர தடுப்பு மசோதா வேண்டாம்:கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்

    கோரக்பூர் :பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை(தடுப்பு) சட்டம் சமூகத்தை பிளவுப்படுத்தும் என ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.rss riot






    ரத யாத்திரையை நிறுத்துவிட்டு அத்வானி மன்னிப்புக்கோர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ

    e.ebubacker
    புதுடெல்லி : ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தும் அத்வானி யாத்திரையை நிறுத்திவிட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர தயாராக வேண்டும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.