அமெரிக்க பொருளாதாரத்துறையில் பிரமுகரான குப்தா சட்டவிரோத பங்கு நடவடிக்கை தொடர்பான ஊழலில் சிக்கினார்.குப்தாவின் நண்பரான இலங்கைவம்சாவழியைச்சார்ந்த ராஜரத்தினத்திற்கு ஃபெடரல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
அதேவேளையில் குப்தா நிரபராதி என அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றதும், உண்மைக்கு புறம்பானதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.